NFTECHQ

Friday 11 November 2016

வங்கி ஊழியர் சங்க

தலைவர்  வெங்கடாசலம்



"பொதுமக்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு பொதுமக்கள் வங்கிகளில் குவிந்துள்ளதால்  வங்கிகளும் கடும்  நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தேவையான  அளவுக்கு வங்கிகளுக்கு  ரிசர்வ்  வங்கி  பணத்தை அனுப்பவில்லை.

ஓரளவு 2000  ரூபாய்  நோட்டுக்கள் வந்துள்ளன.

500 ரூபாய் புதிய  தாள்கள்  வரவில்லை.

100 ரூபாய்  தாள்களும் தேவைக்குக் குறைவாக  உள்ளது.

இதன்காரணமாக  இன்னும்  சில  நாட்களுக்கு இந்த நெருக்கடி  இருக்கும்"

இந்தியா முழுவதும் இரண்டு லட்சத்து  26 ஆயிரம் .டி.எம்- கள்  உள்ளன.

 தமிழகத்தில்  சுமார்  6 ஆயிரம் .டி.எம்-கள் உள்ளன.

ஊரகப்  பகுதிகளில் மட்டும்  சுமார்  80 ஆயிரம் .டி. எம்-கள்  உள்ளன.
இந்த  .டி.எம்-களின் இயல்பு நிலை திரும்ப
இன்னும் 15 நாட்களாவது ஆகும்.  

.டி.எம்- களை  ரீ டியூன்   செய்ய  வேண்டிய  பணி  உள்ளது  

அந்தப் பணி  முடிந்தால் மட்டுமே  இயல்பு நிலைக்குக்  கொண்டு வர முடியும்.  பொதுமக்களுக்கு இயல்பான  சேவையை  வழங்க  இன்னும் சில  நாட்கள்  ஆகும்.

ஒய்வு பெற்ற ஊழியர்களைப்  பணியமர்த்திப்  பணியைத் துரிதப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.  

இன்று  அவர்கள்  இந்தப் பணியில் இணைய உள்ளனர்.

மேலும் வேலை நேரத்தை அதிகரித்துள்ளோம். இந்த அறிவிப்பு பொதுமக்களுக்கு  மட்டுமல்ல  

 வங்கி உழியர்களுக்கும்  மனஉளைச்சலைக்   கொடுத்துள்ளது"  என்றார்

No comments:

Post a Comment