NFTECHQ

Tuesday 1 November 2016

ஊதிய மாற்றக் குழு
01.01.2017 முதல் நமது
ஊழியர்களுக்கு ஊதியம் மாற வேண்டும்.

இதற்கென
இருதரப்புப் பேச்சுவார்த்தைக்காக
அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு  குழுவை
நிர்வாகம் அமைத்திட வேண்டும்.

இந்தக் குழுவை அமைத்திட வேண்டும் என்று நமது மத்திய சங்கம் நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இதற்காக ஆர்ப்பாட்டம் தர்ணா போன்ற போராட்டங்களையும் நடத்தினோம்.

ஊதிய மாற்றக் குழு அமைப்பது சம்பந்தமாக நமது தலைமை அலுவலகம் அனைத்து மாநில பொதுமேலாளர்களுக்கும் அன்று ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

சங்கங்களுக்கும் அந்தக் கடிதத்தின் நகல் தரப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களின் அமைச்சகம் (DPE) சென்ற முறை 09.11.2006 அன்றுதான் அளித்தது.

இதுவரை வழிகாட்டுதல்கள் எதுவும் வரவில்லை என்றும், வழிகாட்டுதல்கள் வந்தபின்,
அதற்கு DOT  ஒப்புதல் அளித்த பின் ஊதிய மாற்றக் குழு அமைக்கப்படும் என்றும் அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இயக்குநர் (மனிதவளம்) இது குறித்து DOT  அதிகாரிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2006க்கும்
2016க்கும்
வழிமுறைகள் மாறியதாக நாம் அறியோம்.

காலத்தைக் கடத்த கடிதமும் ஒரு வழிதான்.

No comments:

Post a Comment