NFTECHQ

Saturday 26 November 2016

ஒரு புரட்சி

தீபம் மறைந்தது



பிடல் காஸ்ட்ரோ

உலக வரைபடத்தில் ஒரு சின்னப் புள்ளி க்யூபா
உலகையே மிரட்டிய அமெரிக்காவை எதிர்த்து நின்றதில் உலக வரைபடத்தில் பெரும்புள்ளி க்யூபா.

"அடைந்தால் சோசலிசம்
அடையாவிட்டால் மரணம்"
இத்வே அவரது கொள்கையும் கோஷமும்.

மக்களைத் திரட்டினார்.
மாபெரும் புரட்சி இயக்கம் நடத்தினார்.

விடுதலையைப் பெற்றார்.
வீறு கொண்டு எழுந்தார்.

எழுந்தவர் விழவேவில்லை.
ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளுக்குப் பின்னும்

அமெரிக்க ஏகாதிபத்தியம்
638 வழிகளில்
புரட்சியாளனைக் கொல்ல முயன்றது.
அவரது ஆட்சியை அழிக்கத் துடித்தது.
அனைத்தையும் முறியடித்தார்.

மக்களைத் திரட்டினார்.
மக்களுக்க்காக வாழ்ந்தார்.
மக்களோடு வாழ்ந்தார்.

மணிக்கணக்கில் பேசினார்.
மக்களின் பிரச்னைகளைப் பேசினார்.

அனைத்து வகை கல்வியும்
அனைத்து மருத்துவச் சிகிச்சைகளும்
முற்றிலும் இலவசம் அவரது ஆட்சியில்.

50 ஆண்டுகள் தொடர்ந்து அதிபர் பதவி.
அதுவும் மக்களின் ஆதரவோடு.
இது வரலாறு
அழிக்க முடியாத வரலாறு.

சிறந்த புரட்சியாளராக மட்டுமல்ல
சீர்மிகு ஆட்சியாலராகவும் திகழ்ந்தார.

அணி சேரா நாடுகளின் தலைவராகவும்
பொறுப்பு வகித்தவர்.
அப்பணியிலும் பரிணமித்தவர்.

இவரது வெற்றிக்குக் காரணம் மார்க்சியம்.
மனிதநேய ஆட்சிக்குக் காரணம் மார்க்சியம்.

பிடல் காஸ்ட்ரோவுக்குச்
செலுத்தும் அஞ்ச்சலியும்
காட்டும் நன்றியும் எவ்வாறு?

மார்சியம் அறிந்தவர்கள்
மார்சியம் புரிந்தவர்கள்
ஒன்றிணைந்து செயல்படுவதே.


No comments:

Post a Comment