பாராட்டுகிறோம்
ஈரோடு மாவட்டத்தில் 31.01.2020 அன்று
விருப்ப ஓய்வுத் திட்டத்தின் கீழ் பணி ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய விண்ணப்பங்கள்
சரிபார்ப்புப் பணி நிறைவு பெற்றது.
17.02.2020 அன்று அனைத்து
விண்ணப்பங்களும் சென்னையில் உள்ள DOT அலுவலகத்தில்
ஒப்படைக்கப்பட்டு விட்டன.
தமிழகத்தில் விருப்ப ஓய்வு
பெற்றவர்களின் விண்ணப்பங்களை முழுமையாக ஒப்படைத்ததில் திருநெல்வேலிக்கு அடுத்து
இரண்டாவது இடத்தை ஈரோடு மாவட்டம்
பெற்றுள்ளது.
இப்பணியில் காலநேரம் பாராது
அர்ப்பணிப்புடன் பணியாற்றி விரைந்து முடித்திட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு
நமது மாவட்டச் சங்கம் சார்பாக மனம் நிறைந்த பாராட்டுக்களை உரித்தாக்குகிறோம்.
பணி ஓய்வு பெற்ற பின்னும் இப்பணியில்
தங்களை ஈடுபடுத்திக் கொண்டு உதவிட்டவர்களையும் மனதாரப் பாராட்டுகிறோம்.