NFTECHQ

Tuesday 27 August 2019


வதந்திகளின் வசந்தகாலம்
தந்திசேவை காலாவதியாகி விட்டது.
ஆனால் வதந்திகளுக்கு இன்று வசந்தகாலம்.
வதந்திகளையப் பரப்புவதும், வாய்க்கு வந்த பொய்களைப் பரப்புவதும்,
வசைமாரி பொழிவதும்
பல ஆண்டுகளாக  தொடர்ந்து நடக்கும் செயல்கள்தான்.
நம்பிக்கை என்னும்   நாற்றை விதைப்பது நல்லோர் செயல்.
எல்லாம் நாசமாய்ப் போய்விடும் என்று சொல்வது மட்டுமே சிலருக்குத் தெரிந்த ஒன்று.. அப்பணியில் மட்டுமே அவர்களுக்குத் தெளிவு உண்டு.
சமீபத்திய சான்று யாதெனில் ஓய்வுபெறும் வயது 60 என்பது 58 ஆகக் குறைப்து என்பது  பிரதம மந்திரி அலுவலகத்தால் ஏற்கப்பட்டுவிட்டது என்று செய்தி பரப்பப்பட்டது.  ஊழியர்கள் மத்தில் ஒரு அசாதாரண சூழலை உருவாக்கினார்கள்.ஆனால் உண்மை என்ன?
பிரதமரின் முதன்மைச் செயலர் சகூட்டிய கூட்டத்தின் அதிகார பூர்வமான குறிப்பில் (Official Minutes) விருப்ப ஓய்வுத் திட்டம் அமலாக்கப்பட்டால் அதற்கான செலவு விபரம் குறித்து அறிக்கை தருமாறு DOT செயலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஓய்வு பெறும் வயதை 58 ஆகக் குறைப்பது பற்றி விவாதம் எதுவும் நடைபெற்றதாக அக்குறிப்பில் எதுவுமே குறிப்பிடப்படவில்லை.
"அச்சம் தவிர் "  என்றான் பாரதி. ஆனால் "அச்சத்தை உருவாக்கு" என்று எந்த ஒரு மானுடனும் சொல்லவில்லை.
இப்படிப்பட்டவர்களை மிகச்சரியாக அடையாளம் காண வேண்டிய தருணம் இது.

Monday 26 August 2019


இறுதி வாக்காளர் பட்டியலும்
சில கணக்குகளும்
தமிழகத்தில்  உறுப்பினர் சரிபார்ப்புக்கான தேர்தலின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டு 780 வாக்காளர்கள் இருந்தனர்.2019ல் 477 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 303 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 2013ஆம் ஆண்டு 12074 வாக்காளர்கள் இருந்தனர்.2019ல் 7682 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 4392 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

அகில இந்திய அளவில் 2013ஆம் ஆண்டு 163820 வாக்காளர்கள் இருந்தனர். நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட தகவலில் 31.05.2019 அன்று 117305 ஊழியர்கள் பணியில்  இருப்பதாக அறிவிக்கப்பட்ட்டது.
2013 மே முதல் 2019 மே வரை 37 மாதங்களில் 46515 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
சராசரியாக மாதம் ஒன்றுக்கு 1300பேர் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெறுகின்றனர்.

இதனையே அளவீடாகக் கொண்டால் BSNL நேரடி நியமன ஊழியர்கள் மற்றும் பரிவு அடிப்படையில் பணி பெற்றவர்களையும் தவிர்த்து கணக்கிட்டால் மீதி உள்ள ஊழியர்கள் அனைவரும் 60  மாதங்களில் பணிநிறைவு பெற்றுவிடுவார்கள்.

Tuesday 20 August 2019

துவங்குகிறது பயணம்

உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலில் நமது NFTE பேரியகத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்ற வேண்டுகோளுடன் நாளை 21.08.2019  தோழர்களின் பிரச்சாரப் பயணம் துவங்குகிறது.

BSNL நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பங்கேற்கும் தேர்தல் இது.

BSNL நிறுவனம் வளர்ர்ச்சி பெறவும், ஊழியர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படவும், ஊழியர்களின் பிரச்னைகள்  மற்றும் கோரிக்கைகள் தீர்வு காணப்படவும்  NFTE பேரியக்கத்தின் இணைந்த கரங்கள் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டுகோள் விடுத்து ஊழியர்களிடம் நடைபெறும் பிரச்சாரம் துவங்குகிறது.

NFTE பேரியக்கத்தால் பெற்ற நன்மைகளைச் சொல்வோம்.
உண்மைகளைச் சொல்வோம்.

Monday 19 August 2019


செயலுக்கு வித்திட்ட
செம்மையான செயற்குழு
18.08.2019 அன்று கோபியில் மாவட்டச் செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் எழுச்சியோடு நடைபெற்றது.
கோபி கிளைச்செயலர் தோழர் கார்த்திகேயன் வரவேற்புரையாற்றினார். மாநில அமைப்புச் செயலர் தோழர் புண்ணியகோட்டி செயற்குழுவைத் துவக்கிவைத்து உரையாற்றினார்.

செயற்குழுவின் நோக்கம் குறித்து மாவட்டச்செயலர் தோழர் பழனிவேலு எடுத்துரைத்தார்.

01.08.2019 அன்று கோபியில் நடைபெற்ற தமிழ்மாநில தேர்தல் பிரச்சாரத் துவக்க விழா மற்றும் 16.09.20119 அன்று நடைபெறவுள்ள உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் குறித்து கிளைச்செயலர்களும் மாவட்டச் சங்க நிர்வாகிகளும் தங்கள் கருத்துக்களை நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் முன்வைத்தனர்.

தோழர்கள் மாலி, ராஜமாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மத்துய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர் செம்மல் அமுதம் சிறப்புரையாற்றினார்.
தேர்தல் பிரச்சாரத் துவக்கவிழாவைச் சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு நல்கிய மாவட்டச் சங்க நிர்வாகிகள் கிளைச்செயலர்கள், முன்னணித்தோழர்கள் தோழியர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து கெள்ரவிக்கப்படனர்.

விழாவினைச் சிறப்பாக நடத்திட அரும்பணியாற்றிய கோபி கிளைத் தோழர்கள் தோழியர்கள் அனைவரும் பாராட்டி கெளரவிக்கப்பட்டனர்.

உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து முடிவுகளும் பிரச்சாரப் பயணத் திட்டமும் வகுக்கப்பட்டன.
மாவபட்ட அமைப்புச் செயலர் தோழர் செளந்தர் நன்றி கூறினார்.

சிறப்பான, 
ஆக்கபூர்வமான,  
வெற்றிக்கு வித்திட்ட முடிவுகளொடு 
செயற்குழு சிறந்தது.


அக்ங்கள் மகிழ்ந்த ஆண்டுப்பேரபவை
825 உறுப்பினர்களைக் கொண்ட ஈரோடு மத்திய அரசு ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் 28ஆவது ஆண்டுப்பேரவை 17.08.2019 அன்று அறிவாற்றல் மிக்க தோழர் D.மாணிக்கம் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பொருள்பொதிந்த செயல் அறிக்கையை செயலாற்றல் மிக்க தோழர் S.ராஜசேகரன் சமர்ப்பித்தார். வியக்கத்தக்க பல்வேறு பிரச்னைகள் தீர்வைப் பற்றி எடுத்துரைத்தார். வளமான நிதிநிலை அறிக்கையை பொருளாளர் அனுபவம் மிக்க தோழர் C.ராமசாமி சமர்ப்பித்தார். செயல்பாட்டின் சிறப்பையும் அமைப்பின் வளர்ச்சியையும் நிதிநிலை சுட்டிக்காட்டியது. வருமானவரி மற்றும் அஞ்சல்துறையில் வங்கிச்சேவை குறித்து செயலால் பொழுதளக்கும் தோழர் P.சண்முகம் விள்க்கவுரையாற்றினார். 90 மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட தோழர் தோழியர்களுக்கு சிறப்பான வாழ்த்து வழங்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தோழர் மாலி "BSNL  இன்று"  என்னும் தலைப்பில் உரையாற்றினார். தோழர்கள் V.செல்வராஜன், K.ராஜமாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  அனைவருக்கும் நினைவுப்பரிசு அளிக்கப்பட்டது. 250க்கும் மேற்பட்ட தோழியர்கள் உட்பபட 500  பேர் கலந்து கொண்டனர். தலைவர்களின் உரையை அனைவரும் அமைதியுடன் செவிமடுத்தது சிறப்பு. சுவைமிக்க மதிய உணவு  பாராட்டுக்குரியது.
தோழர்கள் D.மாணிக்கம், S.ராஜசேகரன், C.ராமசாமி ஆகியோர் முறையே தலைவ்ர், பொதுச்செயலர், பொருளர் பதவிகளுக்கு மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர்கள் D.மாணிக்கம், S.ராஜசேகரன், C.ராமசாமி, P.சண்முகம், A.பாலசுப்ரமணியன், K.மாசிலாமணி ஆகியோர் உறுப்பினர்களுக்காக ஆற்றும் அரும்பெரும் சேவை பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது. அமைப்பில் சிறப்பாகச் செயல்படும் தோழர்கள் கெளரவிக்கப்பட்டனர். வரும் காலத்தில் மேலும் சிறப்பான செயல்பாட்டுக்கான சில நடைமுறைகளும் உருவாக்கப்பட்டன.  அகங்களை மகிழ்வித்த ஆண்டுப்பேரவை சிறப்பாக நடைபெற உழைத்திட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.


Thursday 15 August 2019



இனிய
சுதந்திர தின
வாழ்த்துக்கள்


Wednesday 14 August 2019



மாவட்டச் செயற்குழு
அன்பார்ந்த தோழர்களே

வணக்கம். நமது மாவ்ட்டச் சங்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டம் வரும் 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு கோபி தொலைபேசிநிலையத்தில் மாவட்டத் தலைவர்
தோழர்  ப.பாலசுப்ரமணியன்
அவர்கள் தலைமையில் நடைபெறும். கிளைச்செயலர்களும் மாவட்டச் சங்க நிர்வாகிகளும் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்க வேண்டுகிறோம்

ஆய்படுபொருள்
16.09.2019 அம்று நடைபெறவுள்ள உறுப்பினர் சரிபார்புத் தேர்தல்-நமது கடமைகளும் பணிகளும்
01.08.2019 -தமிழ் மாநில தேர்தல் பிரச்சாரத் துவக்கவிழா சிறக்க
பணியாற்றியோருக்கு பாராட்டு
மாவட்ட அளவிலான பிரச்னைகள்
இன்னபிற தலைவர் அனுமதியுடன்

தோழமை  வாழ்த்துக்களுடன்

N.பழனிவேலு
மாவட்டச் செயலர்

Monday 12 August 2019

இன்று பக்ரீத்.

இது ஒரு தியாகத் திருநாள்.

இந்நன்னாளில் இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Thursday 8 August 2019


தலைமையும் தோழமையும்
ஒரு அமைப்பின் பொறுப்பில் இருப்பவர்கள் பிறருக்கு வழிவிட்டு மற்றவர்களுக்கு வாய்ப்பினை உருவாக்கித் தருவது அந்த அமைப்பின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். அந்த அடிப்படையில் 2013ஆம் ஆண்டு நான் மாவட்டச்செயலர் பொறுப்பிலிருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். தோழர் பழனிவேலு (லாசர்) மாவட்டச் செயலராகப் பொறுப்பேற்றார். 2016ல் நான் பணி ஓய்வு பெறும்வரை என்னால் இயன்ற அளவுக்கு உறுதுணையாக இருந்தேன். அவருக்கு சுயமாகச் சிந்தித்தல், சுயமாகச் செயல்படுதல் போன்ற திறமைகள் உண்டு. மற்றவர்களின் கருத்தை உள்வாங்க்கிக் கொள்ளுதல், மற்றவர்களின் கருத்துக்களுக்கு மரியாதை அளித்தல், மற்றவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்ளுதல் என்ற பண்புகளும் அவரிடத்தில் உண்டு. சுய விமர்சனம் செய்து கொள்ளும் பண்பு நிறைந்தவர். பிறரது விமர்சனங்கள் நியாயமானதாக இருப்பின் அவற்றை ஏற்பார். தவறான விமர்சனங்களாக இருப்பின் பொறுமையாக உரிய பதில் சொல்லும் ஆற்றல் மிக்கவர். இயக்கத்தின் நலன் கருதி சகிப்புத்தனமையுடன் செயல்படும் குணமும் அவரிடத்தில் உண்டு.

தலைமைக்குரிய பண்புக்ளை வளர்த்துக் கொண்டதன் விளைவாக 01.08.2019 அன்று NFTE பேரியக்கத்தின் தேர்தல் பிரச்சாரத் துவக்க விழாவை அனைவரும் போற்றிப் பாராட்டும் வகையில் கோபியில் மிகச் சிறப்பாக நடத்த முடிந்தது. அனைவரையும் அரவணைத்து, கருத்துக்களைக் கேட்டு திட்டமிட்டார். உருவான திட்டத்துக்கு சிறப்பான செயல் வடிவம் தந்தார். ஆக, தன்னை ஒரு சிறந்த் தலைவனாக நிரூபித்து கொண்டார் தோழர் லாசர். அவருக்கு நன்றியையும், பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் உளமார மகிழிச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனி ஒரு மனிதனாக இப்பணியை அவரால் செய்திருக்க இயலாது. இளமைத்துடிப்பும், ஆர்வமும் மிக்க மாவட்டத் தலைவர் தோழர் பாலு,  அனுப்பவமும் ஆற்றலும் மிக்க மாவட்டப் பொருளர் தோழர் மெளனகுருசாமி, மாவட்டச் சங்க நிர்வாகிகள் தலைவர்கள் சிரமமின்றி வந்து செல்ல உதவிய     தோழர் நாகராஜன், சிறப்பான களப்பணியாற்றிய தோழர் செளந்தர்  தோழர் ஈஸ்வரன், தோழர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் உறுதுணை புரிந்தனர். கிளைச்செயலர்கள்  போதுமான  அளவுக்கு துணை நின்றனர். இயக்கத்தின் ஆணிவேர்களான தோழர்களும் தோழியர்களும் உதவினர். கோபி கிளையின் தோழர்கள் அனைத்து ஏற்பாடுகளுக்கும் அளப்பரிய பணிகளை
அற்புதமாகச் செய்தனர். மாநில அமைப்புச் செயலர் தோழர் புண்ணியகோட்டி காசாலும் கருத்தாலும் உதவினார்.

தமிழகத்தில் நமது பேரியக்கத்தின் வரலாற்றில்  பல  முத்திரைகளைப் பத்தித ஈரோடு மாவட்டச் சங்கம் ஒரு மிகப்பெரிய கடமையை மீண்டும் ஒருருமுறை முத்தாட்ப்போடு மிகச் சிறப்பாக செவ்வனே ஆற்றியிருக்கிறது.
அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களையும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வு அடைகிறேன்.
வாழ்த்துக்களுடன்
G.குமார்

Friday 2 August 2019


வாழிய பல்லாண்டு

31.07.2019 அன்று பணிநிறைவு பெற்ற

1.திரு P.K.சுரமனியன் SDE
2.திரு S.P.சண்முகசுந்தரம் SDE
3.தோழர் G. ரகுநாராயணன்O S
4.தோழர் A.குணசெகரன்  TT
5.தோழர் P.கணேசன் TT
6.தோழர் V.ராஜேந்திரன் TT
7.தோழர் K.ஆறுமுகம் TT
ஆகியோர் நலமுடனும் மகிழ்வுடனும்
பல்லாண்டு வாழ வாழ்த்துகிறோம்.