NFTECHQ

Thursday 24 November 2016

நல்ல முடிவு

65000 பி எஸ் என் எல் டவர்களைப் பிரித்து தனியாக ஒரு நிறுவனத்தைத் துவக்குவது என்ற அரசின் முடிவை எதிர்த்து
25.11.2016 அன்று தர்ணா
15.12.2016 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தம் என அனைத்து இயக்கங்களும்
இணைந்து முடிவு எடுத்துள்ளன.

23.11.2016 அன்று ஈரோட்டில் அனைத்து அமைப்புகளின் தலைவர்களும் கூடி இந்த அறைகூவல்களை வெற்றிகரமாக  நடத்துவது பற்றி ஆலோசனை செய்தனர்.

"தர்ணா நடத்தினால் வழக்கமாக வருகின்றவர்கள் மட்டுமே பங்கேற்பார்கள்."  

"வெளியூர்த் தோழர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு செலவு செய்து ஈரோடு வந்து போக வேண்டும்"

"பந்தல், நாற்காலி, மதிய உணவு என மாவட்டச் சங்கங்களுக்கும் செலவு"

"ஒவ்வொரு தர்ணாவுக்கும் சுமார் 10,000 ரூபாய் செலவாகிறது"

"அனைத்து ஊழியரகளுக்கும் கோரிக்கையின் முக்கியத்துவமும் போராட்ட்டத்தின் அவசியம் குறித்தும் கருத்துக்கள் செல்ல வேண்டும்"

"இவற்றைக் கருத்தில் கொண்டு
அனைத்து SDCA தலைநகரக்களிலும் மற்றும் வாய்ப்புள்ள இடங்க்களிலும் அனைத்து அமைப்புகளும் இணைந்து
ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தலாம்" என்ற கருத்தை NATIONAL FPRUM OF BSNL WORKERS" சார்பாக முன்வைக்கப்பட்டது.

ஆய்வுகளுக்குப் பின் இந்தக் கருத்து ஒரு மனதாக ஏற்கப்பட்டது.

"தலைவர்கள் இருக்கும் இடம் தேடி ஊழியர்கள் வருவது  என்பதை விட ஊழியர்களை நோக்கி தலைவர்கள் செல்வது" என்பதுதான் சிறந்தது.

ஒரு நல்ல புதிய சிந்தனை.

இந்த அடிப்படையில் நல்ல முடிவெடுத்த அனைவரையும் பாராட்டுகிறோம்.

No comments:

Post a Comment