NFTECHQ

Saturday 19 November 2016

இரங்கல்
எட்டு மணி நேர வேலை
எட்டு மணி நேர ஓய்வு
எட்டு மணி நேர உறக்கம்
இவற்றைப் பெற
இன்னுயிர் தந்தோர் பலர்.

24 மணி நேரத்தில்
அன்றாடம் ஏறத்தாழ 16 மணி நேரம்
பணி செய்துள்ளனர்
பாரத தேசத்தின்
வங்கி ஊழியர்கள்.

ஓயாத உழைப்பு
ஓயாத பணிச்சுமை
பணத்தைக் கையாளுவதால்
ஏற்பட்ட மன உளைச்சல்
இவற்றின் காரணமாக
அரியானா, மத்தியப்பிரதேசம் மற்றும் மகராஷ்ட்ரா மாநிலங்க்களை ச் சேர்ந்த
மூன்று வங்கி ஊழியர்கள்
தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

அவர்களுக்கு நமது இரங்கலும் அஞ்சலியும்.

வங்கிகளில்  பனம் பெற
வறுத்தெடுக்கும் வெயிலில் பலமணி நேரம்
செல்லாக் காசை கையில் ஏந்தி
வாடி நின்றவர்களில்
50 பேர் இன்னுயிரை
இழந்துள்ளனர் என்பதும் செய்தி.

அவர்களுக்கும் நமது இரங்கலும் அஞ்சலியும்.

இந்நிலைக்கு ஆளாக்கியவர்களை

இனி வரும் காலம் மன்னிக்காது.

No comments:

Post a Comment