கொடியும் கட்டுவார்
கொள்கை முடிவும் எடுப்பார்
அன்பெனும் வலைக்குள் அகப்படும்
ஆருயிர்த் தோழர் அவர்.
இதயம் முழுமையும் மனிதாபிமானம் நிறைந்தவர் அவர்.
ஈன்ற பொழுதினும் இன்றும் என்றும் தன் தாயை மகிழச் செய்பவர் அவர்.
உழைப்பென்னும் சொல்ல்ன் இலக்கணம்
அவர்.உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்ட வாழ்வு அவருடையது.
ஊழியர்களுக்கு உதவும் உற்ற தோழன்
அவர்.
எந்நாளும் நன்றி மறவாதவர் அவர்.
ஏற்றம் பெற உதவிட்ட
மானுடர்களையும்,பாதையையும்
எந்நாளும்
மறவாதவர் அவர்.
ஒழுக்க வாழ்வை உயிரென மதிப்பவர் அவர்.
ஓங்கு புகழ்
சங்கத்துக்குவிசுவாசமானவர் அவர்.
அவர்தான் தோழர் யாசின்.
31.05.2020ல் அப்பழுக்கற்ற இலாகாப்
பணியை நிறைவு செய்துள்ளார்.
பணிநிறைவுக்காலம் நலமுடனும்
மகிழ்வுடனும் அமைய வாழ்த்துவோம்.