வேலைநிறுத்தம் வெற்றி பெற வேண்டும்
03.12.2018 முதல் காலவரையற்ற
வேலைநிறுத்தத்தை வெற்றி பெற்ச் செய்ய வேண்டியது நமது கடமை.
இந்த வேலைநிறுத்தம் நம் மீது
அரசாங்கத்தால் திணிக்கப்பட்ட ஒன்று.
01.01.2017 முதல் தர வேண்டிய ஊதிய
மாற்றத்தை இரண்டு ஆண்டுகள் கடந்த் பின்னும் இழுத்தடிக்கும் அரசின் போக்கை மாற்றிட
பல்வேறு இயக்கங்கள் நடத்திய பின்னும் அலட்சியப் பார்வை காட்டும் அரசின் மீது நாம்
தொடுத்துள்ள கடைசி ஆய்த்மே இந்த வேலைநிறுத்தம். இனியும் போராடாமல் இருப்பது தவறான
வரலாற்றை உருவாக்கி விடும்.
பணி ஓய்வு பெறுபவர்கள் போராடலாமா
என்ற கேள்வி வழக்கம் போல் எழுந்திள்ளது.
ஓய்வூதியப் பலன்கள் பாதிக்கப்பட்டு விடுமோ என்ற எண்ணத்தில் எழும் கேள்வி இது. 2000
ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் போராடி அரசு ஓய்வூதியத்தை நாம் பெற்றோம்.
ஓய்வூதிய விதி சொல்வது என்ன?
ஒருவர் பணி ஓய்வு பெறும் மாதத்தில்
அவர் பெறும் அடிப்படைச் சம்பளமே ஓய்வூதியப் பலங்களுக்கான அடிப்படை. ஆகவே
போராட்டத்தில் பங்கேற்பதின் காரணமாக ஓய்வூதியப் பலன்களில் எந்த் ஒரு பாதிப்பும்
வராது.
மேலும்இந்த்ப் போராட்டம் காரணமாக ஊதிய
மாற்றம் பெறும்போது ஓய்வூதியப் பலன்களும் கணிசமாக உயரும்.
4கி அலைக்கற்றையை நமது நிறுவனத்துக்கு
ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்காகவும் நடைபெறும் வேலைநிறுத்தம் இது. இதனால்
நிறுவனம் வளர்ச்சி பெறும். அதனால் நமக்கும்
முன்னேற்றம் கிடைக்கும்.
நமது நிறுபவனம் 4ஜி சேவை கொடுத்தால் தனியார்
நிறுவனங்களின் வளர்ச்சியும் லாபமும் தடைபட்டு விடும் என்ற நோக்கத்துடன் அரசு தாமதிக்கிறது.
அரசின் இந்த் போக்கை மாற்றி 4ஜி சேவையை நமது நிறுவனமும் வழங்குவதற்காகவும் இந்த
போராட்டம்.
போராட்டங்களே நம்மை முன்னேற்றியிருக்கின்றன.
இதுவே சரித்திரம் சொல்லும் பாடம்.
நாளை (03.12.2018) முதல் துவங்கும்
வேலைநிறுத்தத்தில் உறுதியுடன் போராடுவோம். ஒற்றுமையுடன் போராடுவோம்.
இறுதியில் வெற்றி நமக்கே.
வாழ்த்துக்கள்