நெருப்பு இல்லாமலும்
புகையும்
நெருப்பு இல்லாமல் புகையாது என்பர்.
ஆனால் நெருப்பு இல்லாமலும் புகையைக் கிளப்பும் சக்தி சிலருக்கு உண்டு.
அப்படிப்பட்ட சக்தி படைத்த சில சதிகாரர்கள் கிளப்பி விட்ட புகைதான் பி.எஸ்.என்.எல் மூடப்படும் என்ற செய்தி.
கொள்ளை லாபத்துக்காக
எதையும் செய்யத் துணியும் கூட்டம்
ஒன்று சுயலாபத்துக்காக செய்த சதி இது.
லட்சக்கணக்கானோரின் வியர்வையிலும்
உழைப்பிலும் உதிரத்திலும் விளைந்த இந்த நிறுவனம் மூடப்படும் வாய்ப்பு என்பது
கிஞ்சித்தும் கிடையாது.
நமது நோக்கங்களைத் திசை திருப்பும் சதியே
இது.
நிறுவனம் காத்திட,
ஊழியர் உரிமை பெற்றிட
18.02.2019 முதல் 20.02.2019 வரை
நடைபெறவுள்ள வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.
சதிகளை முறியடிப்போம்.
நமது நியாயமான உரிமைகளைப்
பெற்றிடுவோம்.
No comments:
Post a Comment