NFTECHQ

Sunday 24 February 2019


பெரியார் மன்றம் தந்த பேரானந்தம்

23.02.2018 அன்று ஈரோடு மத்திய அரசு ஊழியர் நலச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழு நல்வழிகாட்டும் தலைவர் தோழர் D. மாணிக்கம் அவர்கள் தலைமையில் பெரும் சிறப்புடன் நடைபெற்றது. பொதுச்செயலர் சிறந்த செயல்பாட்டின் இலக்கணமாய்த் திகழும் தோழர் ராஜசேகரன் செயல்பாட்டு  அறிக்கையைச் சமர்ப்பித்து மிகச் சிறப்பான உரையாற்றினார். அனைவருக்கும் பயன் தரும் பல்வேறு தகவல்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். தோழர் ராமசாமி நிதிநிலை பற்றி விளக்கினார். தோழர் சண்முகம் மத்திய அரசு ஓய்வூதியர் பிரச்னைகள் மற்றும் வருமான வரி குறித்து  பயனுள்ள உரையாற்றினார். தோழர்கள் ராஜமாணிக்கம், செல்வராஜன் ஆகியோர் சிறப்பான பாராட்டுரையும் வாழ்த்துரையும் வழங்கினர். "பி.எஸ்.என்.எல் இன்று" என்னும் தலைப்பில் நேர்மறையான, நம்பிக்கையூட்டும் தகவல்களுடன் உரையாற்றினார். 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். தோழியர்கள் பங்கேற்பு கணிசமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பங்கேற்றவர்களுக்கு பயனுள்ள கருத்துக்களைத் தந்திட்ட ஆண்டுப்பொதுக்குழு.
பெரியார் மன்றம் தந்த பேரானந்தம்

23.02.2018 அன்று ஈரோடு மத்திய அரசு ஊழியர் நலச் சங்கத்தின் ஆண்டுப் பொதுக்குழு நல்வழிகாட்டும் தலைவர் தோழர் D. மாணிக்கம் அவர்கள் தலைமையில் பெரும் சிறப்புடன் நடைபெற்றது. பொதுச்செயலர் சிறந்த செயல்பாட்டின் இலக்கணமாய்த் திகழும் தோழர் ராஜசேகரன் செயல்பாட்டு  அறிக்கையைச் சமர்ப்பித்து மிகச் சிறப்பான உரையாற்றினார். அனைவருக்கும் பயன் தரும் பல்வேறு தகவல்களை மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார். தோழர் ராமசாமி நிதிநிலை பற்றி விளக்கினார். தோழர் சண்முகம் மத்திய அரசு ஓய்வூதியர் பிரச்னைகள் மற்றும் வருமான வரி குறித்து  பயனுள்ள உரையாற்றினார். தோழர்கள் ராஜமாணிக்கம், செல்வராஜன் ஆகியோர் சிறப்பான பாராட்டுரையும் வாழ்த்துரையும் வழங்கினர். "பி.எஸ்.என்.எல் இன்று" என்னும் தலைப்பில் நேர்மறையான, நம்பிக்கையூட்டும் தகவல்களுடன் உரையாற்றினார். 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். தோழியர்கள் பங்கேற்பு கணிசமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. பங்கேற்றவர்களுக்கு பயனுள்ள கருத்துக்களைத் தந்திட்ட ஆண்டுப்பொதுக்குழு.

No comments:

Post a Comment