NFTECHQ

Saturday 16 February 2019


வெகுண்டெழுவோம்
வெற்றி பெறுவோம்.
நமது உயிரினும் மேலாக நாம் நேசிக்கும் நமது நிறுவனம் காத்திட,
அதை மேலும் வளர்த்திட 18.12.2019 முதல் மூன்று நாட்கள் வேலைநிறுத்தம்.
வாஜ்பாய் அரசின் காலத்தில் உருவான நிறுவனம். நமது போராட்டத்தால் அரசு ஓய்பவூதியம் பெற்றோம். பணிப்பாதுகாப்பைப் பெற்றோம். நிறுவனத்தின் நிதியாதாரம் காக்கப்படும் என்ற எழுத்து பூர்வமான உறுதியைப் பெற்றோம்.
வாஜ்பாய் மறைந்து விட்டார்.
அன்று உறுதியளித்த அமைச்சர் இன்றும் அமைச்சர்.
வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கிய அவரது வாரிசுகள்
வாஜ்பாயின் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்திட்ட அவரது வாரிசுகள் வாஜ்பாய் அளித்த வாக்குறுதியை மதிக்கத் தவறி விட்டனர். நமது நிறுவனத்தை ச் சீர்குலைத்து விட்டனர்.
நமது நியாயமான  உணர்வுகளை,
உரிமைகளை, கோரிக்கைகளை,
ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை,
நமது அறவழிப் போறாட்டங்களை
அலட்சியப் போக்குடன்
அணுகும் போக்கை அனுமதிக்கலாமா?
சங்க வேறுபாடின்றி,
அணி திரள்வோம்.
அரசின் அலட்சியப் போக்கை முறியடிப்போம்.
வெற்றிகள் பல குவித்த
நமது வரலாற்றுப் பாதையில் தடம் பதிப்போம்.
வேலைநிறுத்தத்தை முழுமையாக்குவோம்.
வெற்றி பெறூவோம்.

No comments:

Post a Comment