மத்திய அரசு ஓய்வூதியர்
நலச் சங்கம் ஈரோடு
ஆண்டு மாநாடு
ஈரோடு மாவட்ட மத்திய அரசு ஓய்வூதியர் நலச்
சங்கத்தின் ஆண்டு மாநாடு ஈரோடு பெரியார் மன்றத்தில் 18.08.2018 அன்று மிகச்
சிறப்பாக நடைபெற்றது.
மன்றம் நிறைந்த்து. மகளிர் பங்கேற்பு
மகத்தானது.
அருமைத் தோழர் D.மாணிக்கம் அவர்களின் சீரிய
தலைமையில் நிகழ்வுகள் சிறப்புடன் அமைந்தன.
கலைஞர், சோம்நாத் சட்டர்ஜி, வாஜ்பாய், ரத்னவேல்
பாண்டியன் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இக்கால கட்டத்தில் மறைந்த தோழர்கள்,
கேரளாவில் இயற்கயின் சீற்றத்துக்கு இன்னுயிரை இழந்தோர் ஆகியோருக்கு இரங்கல்
தெரிவிக்கப்பட்டது.
சிறப்பான ஆண்டறிக்கையை பொதுச்செயலாளர்
தோழர் ராஜசேகரன் சமர்ப்பித்தார். வளமான நிதிநிலை அறிக்கையை பொருளர் தோழர் ராமசாமி
சமர்ப்பித்தார்.
பொதுச்செயலாளர் தீர்வு காணப்பட்ட
பல்வேறு பிரச்னைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். அமைப்பின் அரும்பெரும் பணிகளை
பறைசாற்றும் உரை அது.
தீர்வு காணப்பட வேண்டிய பிரச்னைகள் குறித்தும்
எடுத்துரைத்தார்.
தோழர்கள் மாணிக்கம், ராஜசேகரன்,
ராமசாமி ஆகியோர் முறையே தலைவர், பொதுச்செயலர், பொருளர் பொறுப்புகளுக்கு ஏகமனதாக
தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர்கள் ராஜசேகரன், சண்முகம், ராமசாமி,
பாலசுப்ரமணியன், மாசிலாமணி ஆகியோரின் சிறப்புமிகு பணிகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மத்திய அரசு ஓய்வூதியர்களின் பிரச்னைகள்
BSNL ஓய்வூதியர்களின் பிரச்னைகள் மற்றும் மூன்றாவது ஓய்வூதிய மாற்றம் உள்ளிட்ட பிரச்னைகள்
குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள
மக்களுக்கு நிவாரண உதவியாக அமைப்பின் சார்பாக ரூ 15000 வழங்கபடும் என
அறிவிக்கப்பட்டது.
விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஏற்று பங்கேற்பாளர்கள்
ரூபாய் 25000 வழங்கினர்.
சிறப்பும் செழுமையும் மிக்க மாநாடாக
அமைந்தது.
செயல்பாடுகள் மேலும் சிறக்க
வாழ்த்துவோம்.
No comments:
Post a Comment