அமைச்சருடன் சந்திப்பு
01.08.2018 அன்று BSNL
ஊழியர்கள் மற்றும அதிகாரிகள் அமைப்புகளின் தலைவர்கள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்
திரு.மனோஜ் சின்கா அவர்களைச் சந்தித்து பேசினர்.
இந்த சந்திப்பிற்கு
கநாடாளுமன்ற உறுப்பினர் திரு ராஜேஷ் அவர்கள் ஏற்பாடு செய்தாராம்.
நமது அமைப்பின் சார்பில்
துணைப் பொதுச்செயலர் தோழர்.சேஷாத்திரி
பங்ககேற்றார்..
24.02.2018 ல் அமைச்சருடன் விவாதித்து உறுதிமொழி அளிக்கப்பட்ட ஊதியமாற்றம்
-கொடுக்கும் திறன் சம்பந்தமான பிரச்னையில்
விலக்கு பெறுதல்
ஓய்வூதியப்பங்களிப்பு
ஓய்வூதிய
மாற்றம்
4G அலைக்கற்றை
ஒதுக்கீடு
ஆகிய பிரச்னைகளில் யாதொடரு
முன்னேற்றமும் இல்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
4G அலைக்கற்றை
ஒதுக்கீடு பற்றி
விரைவில் மத்திய அரசு முடிவெடுக்கும் என அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
மற்ற பிரச்னைகள்
குறித்து தொலைத்தொடர்புத்துறை செயலருடன் 03.08.2018 அன்று விவாத்திப்பதாக அமைச்சர்
தெரிவித்துள்ளார்.
தங்கள் பிரச்னைகளுக்காக
போராடும் ஊழியர்கள் நிறுவனத்தின் வருமானத்தைப் பெருக்கவும் பாடுபட வேண்டும் என
அமைச்சர் அறிவுரை நல்கியுள்ளார்.
சந்தித்த
அமைச்சருக்கும், சந்திப்புக்கு ஏற்பாடு செய்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் நன்றியை
தலவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment