NFTECHQ

Thursday 6 April 2017

நம்மாழ்வார்
பிறந்த தினம்
ஏப்ரல் 6
இந்த நாளில் அவரது சில கருத்துக்கள்
 “அவர்கள் மாறுவார்களா இல்லையா என்பது என் பிரச்னையல்ல, நான் அவர்களிடம் உண்மையைச் சொல்கிறேனா இல்லையா என்பதும் மாற்று வழிகளைக் காட்டுவதும்தான் என் வேலை”
 “என் வேலையே தற்சார்பு வாழ்வுக்கானதுதானே. அப்புறம் நான் ஏன் உலகமயத்தைத் தனியாக எதிர்க்க வேண்டும்?”
“உலகமயத்துக்கு மாற்று உள்ளூர்மயம். ஒன்று வேண்டாம் என்று சொல்லி வெற்றிடமாக்க முடியாது. எதையேனும் கொண்டு நிரப்ப வேண்டும். அது எது, எத்தகையது என்றால், மக்களுக்கானதாக இருக்க வேண்டும்”
“நீங்கள் வண்ணத்தில் போஸ்டர் அடித்தால் அவன் பல வண்ண போஸ்டர் அடித்து மயக்குவான். உங்களால் அவனின் ஆயுதத்தைத் தூக்க முடியாது. உங்களுடையது சுவர் விளம்பரமாக இருந்தால்? நம்மளவுக்கு அவனால் கீழிறங்க முடியாது. உங்களது ஆயுதம் எதிரியால் எடுத்தாள முடியாததாக இருக்க வேண்டும்”

நம் இலக்கு பெரிது.. எவரையும் இழந்துவிட முடியாது” 

No comments:

Post a Comment