மாவட்டச் செயற்குழு
30.03.2017 அன்று கோபியில் மாவட்டச் செயற்குழு காலை 10 மணிக்குத்
துவங்கி மாலை 5 மணிவரை சிறப்பாக நடைபெற்றது.
கோபி கிளைத்தோழர்கள் கிளைச்செயலர் தோழர் முருகசாமி தலைமையில் மிகச் சிறப்பான
ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
மாவட்டத் தலைவர் தோழர் பாலசுப்ரமணியன் செயற்குழுவை
மிகச் சிறப்பாக வழிநடத்தினார்.
மாநில அமைப்புச் செயலர் தோழர் புண்ணியகோட்டி செயற்குழுவைத்
துவக்கி நல்லதொரு உரையாற்றினார்.
மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு ஆய்படுபொருளை
அறிமுகப்படுத்தியும், இன்றைய சவால்கள், பிரச்னைகள் குறித்து உரையாற்றினார்.
கிளைச்செயலர்களும், மாவட்டச் சங்க நிர்வாகிகளும் தங்கள்
கருத்துககளையும், ஊழியர் பிர்ச்னைகளையும், துறை வளர்ச்சிக்கான தேவைகளையும் விரிவாக
எடுத்துரைத்தனர்.
அவர்கள் தங்கள் கருத்துக்களை காலவரையின்றி ஜனநாயக
அடிப்படையில் சுதந்திரமாக எடுத்துரைக்க தலைமை
எப்போதும் போல் முழுமையான வாய்ப்பளித்தது.
தோழர்களின் முதிர்ச்சியான உரைகள் மகிழ்வைத் தந்தது.
AITUC மவட்டச் செய்லர் தோழர் செல்வராஜன் தனது
வாழ்த்துரையில் நாட்டின் இன்றைய சூழல், நமது கடமைகள் குறித்து எடுத்துரைத்தார்.
தோழர் அருணகிரி நன்றி கூற செயற்குழு நிறைவுற்றது.
No comments:
Post a Comment