யார் ஏற்பாடோ
யாம் அறியோம்
08.09.2018 அன்று BSNL தொழிற்சங்க அமைப்புகளின் கூட்டமைப்பின்
தலைவர்கள் (AUAB) நாடாளுமன்ற விவாகாரத்துறை இணை அமைச்சர் திரு.அர்ஜுன் ராம் மேக்வால் அவர்களைச் சந்தித்து
மனு கொடுத்தனர். ஊதிய மாற்றம், ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதிய பங்களிப்பு, 4ஜி
அலைக்கற்றை ஒதுக்கீடு இவையே மனுவில் இருந்த கோரிக்கைகளாம். பிரச்னைகள் குறித்த
விபரங்களை இணை அமைச்சர் பொறுமையாகக் கேட்டாராம். தொலைத்தொடர்புத்துறை அமைச்சருடன்ஒரு
சந்திப்புக்கு "ஏற்பாடு" செய்வதாகச் சொன்னாராம். தானும் உடன் வருவதாகச்
சொன்னாராம். புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் என்று கேட்கிறோம். படிக்கிறோம்.
இதை தொழிற்சங்கநிலை மாற்றம் என்று சொல்லலாமா?
No comments:
Post a Comment