மீளும் BSNL
கடந்த சில ஆண்டுகளாக நட்டத்தில் இயங்கி
வரும் BSNL நிறுவனம் மீளத் துவங்கியுள்ளது.
“இரவு நேர இலவச அழைப்புகள்”
திட்டம் லேண்ட்லைன் சரண்டரைக்
குறைத்துள்ளது.
“ரோமிங்கில் இலவச இன்கமிங் அழைப்புகள்”
திட்டம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது உண்மை.
ஜூலை
2015ல் 16 லட்சம்
மொபைல் இணைப்புகளை BSNL நிறுவனம் புதிதாகக்
கொடுத்துள்ளது.
இதே ஜூலை 2015ல் ஏர்டெல் 11.9 லட்சம்
இணைப்புகளையும், ஐடியா 10.25 லட்சம் இணைப்புகளையும் கொடுத்துள்ளன.
BSNL நிறுவனத்திலிருந்து MNP மூலம் வெளியே
செல்பவர்கள் எண்ணிக்கை குறைந்து, MNP மூலம் BSNL நிறுவனத்துக்கு உள்ளே வருவோர்
எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது நிச்சயம் மீண்டு எழுவதற்கான பாதையின்
துவக்கமே.
இது போன்று வளர்ச்சிக்கான திட்டங்களை
அறிவித்து தேவையான உபகரணங்க்களையும்,
சிம் கார்டுகளையும் தர வேண்டியது நிர்வாகத்தின் கடமை.
சூழ்நிலையறிந்து பணியாற்ற வேண்டியது
ஊழியர்கள் கடமை
No comments:
Post a Comment