NFTECHQ

Thursday 5 February 2015

உடன்பாடும் உபத்திரவங்களும்



2003ம் ஆண்டு இறுதியில்  நமது நிறுவனத்தின் கணக்கில் நாற்பதாயிரம் கோடி ரூபாய் இருந்தது. அப்போது தோழர் குப்தா ஒரு  கோரிக்கை வைத்தார். ஊழியர்களுக்கு தனிநபர் (பர்சனல்) லோன், வாகனக் கடன், வீட்டுக்கடன், கல்விக் கடன் போப்றவற்றை நிர்வாகமே வழங்க வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் வட்டி வருமானமாகக் கிடைக்கும். பணமும் நம்மிடம் பத்திரமாக இருக்கும். பணத்தைக் கணக்கில் வைத்திருந்தால்அது சிலரின் கண்ணை உறுத்தும் இதுவே கோரிக்கை.
NFTE அங்கீகாரத்தை  இழந்தது. காலம் மாறியது.
விளைவு அலங்க்கோலமானது.
வங்கிகளில்தான் ஊழியர்கள் அனைத்துக் கடன்களையும் பெற வேண்டும் என்று முடிவானது. பல வங்கிகளுடான் மாறி மாறி உடன்பாடு உருவாக்கப்படது.
ஊழியர்களும் கடன் பெற்றனர்.
உபத்திரவங்களும் உருவாகின. ஊழியர்களின் சம்பளத்திலிருந்து வங்கிக் கடனுக்காக பிடிக்கப்பட்ட தொகை வங்கிகளுக்கு உரிய காலத்தில் செல்லவில்லை. விளைவு அபராத வட்டிக்கு ஆளாகின்றனர் ஊழியர்கள். டிசம்பர் 2014 சம்பளத்தில் பிடித்த்ம் செய்யப்பட்ட தொகை 31.01.2015 வரை வங்கிக்குச் செல்லவில்லை.
வங்கியிலிருந்து கடன் திருப்பிச் செலுத்தப்பட்வில்லை என்று எஸ் எம் எஸ் வருகிறது.
கடன் முழுமையும் செலுத்தப்பட்ட பின்னும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதும் நடக்கிறது.
மாவட்ட நிர்வாகம் மாநில நிர்வாகத்தைக் கைகாட்டுகிறது.
இந்தத் தவறுகள் உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும். அதுதான் நாணயத்தின் அடையாளம்.

No comments:

Post a Comment