NFTECHQ

Sunday 7 October 2018


இரசித்துக் கேட்ட ஒரு பாடல்
அன்றைக்கு ஒரு
நாடிருந்ததே
அந்நாட்டில்
ஆறிருந்ததே
ஆறு நிறைய
மீனிருந்ததே
மீன் முழுகிடக்
குளிருரிந்ததே
அன்றைகொரு
வயலிருந்ததே
வயல் முழுதும்
கதிரிருந்ததே
கதிர் கொத்திடக்
கிளி வந்ததே
கிளிகள் பாடும்
பாட்டிருந்ததே
அந்நாட்டில்
வெயிலிருந்ததே
மண்வழியில்
மரமிருந்ததே
மரத்தடியில் பேசிச்
சிரித்திட
நண்பர்கள் கூட்டம்
நூறிருருந்ததே
நல்ல மழை
பெய்திருந்ததே
நரகீத சூடில்லையே
தீவட்டிக்
கொள்ளையில்லையே
தின்றதெதுவும்
நஞ்சில்லையே
ஒரு வீட்டில்
அடுப்பெரிந்தால்
மறுவீட்டில்
பசியில்லையே
ஒருகண் கலங்கி
நிறைந்தால்
ஓடிவரப்
பலருண்டாமே
நாடெங்கும்
மதில்கள்
இல்லையே
நடைவெளி
இடைவெளி
நூறிருந்ததே
நாலுமணிப் பூ
இருந்ததே
நல்லோர்
செயலுக்கு
விலையிருந்ததே
அன்றும் பல மதம்
இருந்ததே
அதையும் தாண்டி
அன்பிருந்ததே
உன்னைப்
படைத்தான்
என்னைப்
படைத்தான்
என்றொரு
சண்டையில்லையே
அந்நாட்டைக்
கண்டவருண்டோ
எங்கே போனது
தெளிவுண்டோ
அந்நாடு இறந்தே
போனதோ
அது வெறும் ஒரு
கனவானதோ

இது ஒரு மளையாள மொழிப் பாடலின் தமிழாக்கம். இதைத் தந்துதவிய தோழர் மதிக்கு நன்றிகள் பல.

No comments:

Post a Comment