NFTECHQ

Wednesday 25 January 2017

கொலைக்களத்தில் 
கொள்கைகள்

விதிகள், நெறிமுறைகள்,கொள்கைகள் என் அனைத்தையும் கறாராகக் கடைப்பிடிக்க வேண்டும் என ஊழியர்களுக்கு புத்திமதிகள் சொல்லப்படுகின்றன. ஊழியர் சங்கங்களுக்கும் இந்த புத்திமதிகள் சொல்லப்படுகின்றன.

ஆனால் அதிகாரிகளுக்கு இது பொருந்தாது என்னும் நிலைபாடு தலைதூக்கியுள்ளது.

மாற்றல் கொள்கையில் அதிகாரியோ ஊழியரோ ஒரு ஊரில் கட்டாயம் இரண்டு ஆண்டுகள் இருந்தால்தான் விருப்பமாற்றலுக்கு விண்னப்பிக்க முடியும் என்பது மாற்றல் கொள்கை. சமீபத்தில் கூட கார்ப்பரேட் அலுவலகம் இதை வலொயுறுத்தி உத்தரவிட்டுள்ளது.

ஊழியர்களைப் பொறுத்தவரை இந்த விதியில் காட்டப்படும் கறார்த்தன்மை அதிகாரிகளுக்குக் கிடையாதா?

கொள்கையை அமல்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளே அந்தக் கொள்கையை கொலைக்களத்துக்கு அனுப்பும் விபரீதங்கள்  அரங்கேறுகின்றன.

ஊழியர் சங்கங்க்கள் இதில் கவனம்
செலுத்த வேண்டிய அவசரம் உள்ளது.

No comments:

Post a Comment