NFTECHQ

Sunday 4 January 2015

ஒற்றுமை ஆண்டா 2015

மக்கள் பொதுவாக மதம், ஜாதி, இனம், மொழி கடந்து ஒற்றுமையாகவே வாழ விரும்புகிறார்கள். ஆனால் சில சக்திகள் மக்களை அவ்வாறு வாழ விடுவதில்லை. இடதுசாரி கட்சிகள் இணைய வேண்டும் என்று பெரும்பான்மையான இடதுசாரிகள் விரும்புகிறார்கள். ஆனால் ஒரு சிலரின் போக்கு அது நிறைவேற தடையாக உள்ளது. தொழிற்சங்க இணைப்பு அல்லது ஒற்றுமை என்பது காலத்தின் கட்டாயம் என்பதற்கு நிகழ்காலமும் நிகழ்கால நிகழ்வுகளும் சத்தியமான சான்றுகளாக விளங்குகின்றன. 27.12.2014க்குள் ஈரோடு மாவட்டத்தில் கையெழுத்து இயக்கத்தைத் துவக்குவது என்ற ஒருமித்த முடிவின் செயலாக்கத்தில் போதுமான அக்கறை காட்டாமல் இருந்தனர். இது ஒன்றுபட்டிருப்பதை வேண்டா வெறுப்புடன் ஏற்றுக் கொள்ளும் மனநிலையா? 2015 ஒற்றுமை ஆண்டாக இருக்க வேண்டும் என வாழ்த்து தெரிவிப்போர் எழுத்தளவில் இல்லாமல் செயல் அளவில் வாழ்ந்து காட்ட முயற்சி செய்ய வேண்டும். செய்வார்களா? விடை கிடைக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.. காதலர் தினத்திற்கு முன்பே ஒற்றுமையின் மீதுள்ள காதல் தெரிந்தி விடும்.

No comments:

Post a Comment