ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய
பாளையக்கார மன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் ஜனவரி 3.. பாஞ்சாலங்குறிச்சியில் பிறந்தவர். 30 வயதில் பாளை
யக்காரராகப் பொறுப்பேற் றார். வீரபாண்டியன், கட்ட பொம்மன், கட்டபொம்ம நாயக்கர்
என்று பல பெயர் களால் அழைக்கப்பட்டார்.l
பிரிட்டிஷ் அரசு தனது ஆட்சியை நிலைநாட்ட,
பாளையக்காரர்களிடம் வரி வசூலிக்க முடிவு செய்தது. அப்பகுதியில் வரி வசூலிக் கும்
ஆங்கிலேயத் தளபதியால் கட்டபொம்மனிடம் வரி வசூலிக்க முடியவில்லை.
1797-ல் கட்டபொம்மனுடன் போரிட பெரும்படையுடன்
வந்தார் ஆலன். கோட்டையைத் தகர்க்க முடியாமல் தோற்று ஓடினார். பிறகு நெல்லை
கலெக்டர் ஜாக்ஸன் தன்னை வந்து சந்திக்குமாறு அழைத்தார். ஆனால் குறிப் பிட்ட
இடத்தில் சந்திக்காமல் வெவ்வேறு இடங்களுக்கு வரச் சொல்லி அவரை அலைக்கழித்தார்
கட்டபொம்மன்.
இறுதியில் ராமநாதபுரத்தில் கட்டபொம்மனை ஜாக்ஸன்
சந்தித்தார். அப்போது, சூழ்ச்சி செய்து இவரைக் கைது செய்ய முயற்சித்தனர்.
கட்டபொம்மன் அதை முறியடித்து, பத்திரமாக பாஞ்சாலங்குறிச்சி திரும்பினார். அந்த
சந்திப்பின்போது, வரி செலுத்துமாறு ஜாக்ஸன் இவரிடம் வலியுறுத்தினார்.
‘உங்களுக்கு வரிசெலுத்தும் அவசியம் எங்களுக்கு
இல்லை. நாங்கள் சுதந்திர மன்னர்கள்’ என்று கட்ட பொம்மன் துணிச்சலாக அவரிடம்
கூறினார். இவரது வீரத்தைப் பார்த்து, சுற்றியுள்ள அனைத்துப் பாளை யக்காரர்களும்
ஆங்கிலேயரை எதிர்க்கத் துணிந்தனர்.
இவரை ஒழிக்க ஆங்கிலேய அரசு முடிவுகட்டியது.
1799-ல் வேறொரு தளபதியின் தலைமையில் இந்த பகுதியை ஆங்கிலேயப் படை முற்றுகையிட்டது.
கடுமையாக நடந்த போரில், இரு தரப்பிலும்
பலர் உயிரிழந்தனர். கோட்டை வீழ்ந்துவிடும் என்ற நிலையில் கட்டபொம்மன் அங்கிருந்து
வெளியேறி புதுக்கோட்டை மன்னரிடம் சரணடைந்தார். ஆங்கிலேயரின் வஞ்சகத்தால் கைது
செய்யப்பட்டார்.
கயத்தாறு என்ற இடத்தில் அவர் மீது
விசாரணை நடத்தப்பட்டது. அப்போதும்கூட, ‘என் தாய் மண்ணைக் காக்க உங்களுக்கு
எதிராகப் போராடினேன்’ என்று கம்பீரத்துடன் முழங்கினார். 1799-ல் கயத்தாறில் 39-வது
வயதில் தூக்கிலிடப்பட்டார்.
இந்திய சுதந்திரப் போராட்டம்
தொடங்குவதற்கு வெகு காலம் முன்பே ஆங்கிலேயரை எதிர்த்து தன் இறுதிமூச்சுவரை
அசாதாரணத் துணிச்சலுடன் போராடியவர். நூற்றாண்டுகள் கடந்தும் வீரத்தின் அடையாளமாகத்
திகழ்கிறார்.
இதே ஜனவ்ரி
3ஆம் நாளில்தான் சிவகங்கையின் வீரமங்கை வேலு நாச்சியார் பிறறந்தார் என்றும்
வரலாற்றில் பதிவாகியுள்ளது.
ஒரு பெண் மின்னல் வேகத்தில் வாள்
சுழற்றிப் போரிட்டு சிவகங்கையை
எதிரிகளிடமிருந்து மீட்டெடுதத வரலாறு
அது.
இப்படிப்பட்ட வீரப் பெருமக்களின்
வரலாறு என்ற்வ்ன்றும்
நிலைத்து நிற்கும்.
நாட்டின் முக்கிய பொத்துதுறை
நிறுவனமான BSNL ஐப் பாதுகாக்க, அதை
மேம்படுத்த போராட வேண்டியது நமது கடமை.
அதற்காக நம்மை
யரும் தூக்கிலிடப் போவதில்லை.
BSNL ஐப்
பாதுகாக்க நாம் போராடவில்லை என்று வரலாறு நமமைச் சாடிவிடக் கூடாது.
ஊழியர்கள்
போராடும்போது தலைவர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று
சுட்டிக் காட்டவும் நமக்கு உரிமை உண்டு.
No comments:
Post a Comment