NFTECHQ

Friday 23 January 2015

பாதிப்புக்குள்ளாகிறதா பாரம்பரியம்?



22.01.2015 அன்று GPF  கிடைக்கும் என நமது தமிழ் மாநிலச் சங்கம் மாவட்டச் செயலர்களுக்கு SMS அனுப்ப, அதை நம்பி மாவட்டச் செயலர்கள் கிளைச் செயலர்களுக்கு SMS அனுப்ப,
கிளைச் செயலர்கள் தகவல் பலகையில் எழுதிப் போட,
ஊழியர்களிடம் எதிர்பார்ப்புகள் ஏராளமானது.
ஏமாற்றமோ அதை விட ஏராளமானது.
நமது தமிழ் மாநிலச் சங்கம் எதையும் சரியாகச் செய்யும், சரியாகச் சொல்லும் என்ற பாரம்பரியம் மிக்கது.
இந்த பாரம்பரியம் சீர்குலைகிறதோ என்ற எண்ணம் உருவாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை மாநிலச் சங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.
பொய்யான,தவறான SMS செய்திகள் உலா வரும் காலம் இது என்பதையும் கவனத்தில் கொள்ள் வேண்டிய அவசியம் உள்ளது.

No comments:

Post a Comment