NFTECHQ

Wednesday 3 April 2013

தினம் ஒரு கேள்வி – ஐந்து


விருப்ப ஓய்வு திட்டத்தையும், கட்டாய ஓய்வு திட்டத்தையும் தடுத்து விட்டதாக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம். ஆனால் அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் பி.எஸ்.என்.எல் வாரியம் ஒரு லட்சம் ஊழியர்கள் / அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பும் திட்டத்திற்கு ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது.  பிரதமர் நியமித்த பிட்ரோடா குழுவின் பரிந்துரை அது. தொலைத் தொடர்பு அமைச்சகத்தின் தீவிர பரிசீலனையில் உள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் வீட்டிற்கு அனுப்பும் திட்டம் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் உடனடியாக அமுலாக்கப்படும். ஆனால் விருப்ப ஓய்வு திட்டத்தையும், கட்டாய ஓய்வு திட்டத்தையும் தடுத்து விட்டதாக பி.எஸ்.என்.எல்.ஊழியர் சங்கம் ஏமாற்றுவதேன்?
நன்றி: சென்னை இணைய தளம்.

No comments:

Post a Comment