NFTECHQ

Saturday 13 April 2013

தினம் ஒரு கேள்வி – ஒன்பது.



அரசு ஊழியர்களாக இருந்தவர்கள் பி.எஸ்.என்.எல் ஊழியர்களாக் கப்பட்டனர். அதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான CGHS மருத்துவ மணைகளில் மருத்துவ வசதி மறுக்கப்பட்டது. எனவே BSNLMRS மருத்துவத் திட்டம் கொண்டு வந்தது NFTE. அந்த அருமையான மருத்துவதிட்டம் BSNLEU காலத்தில் சின்னாபின்னமானது. பல்வேறு கட்டுப்பாடுகள் தன்னிச்சையாக தினிக்கப்பட்டன. அந்த சலுகை இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் என முடிவு செய்யப்பட்டது. ஊழியர்களுக்கு 3 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வந்த மருத்துவப்படி முழுமையாக நிறுத்தப்பட்டது. நிர்வாகத்தின் இச் செயல்களை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது BSNLEU. வங்கி, இன்சூரன்ஸ் போன்ற பொதுத் துறை நிறுவனங்களுக்கு இணையான சிறந்த வசதியினை அபிமன்யூ ஏன் கேட்டுப் பெறவில்லை? நாம் மத்திய அரசு ஊழியர்களாக இல்லாத போது மத்திய அரசு ஊழியர்களுக்கான CGHS கட்டண விகிதங்களை ஏன் ஏற்றுக் கொண்டார்? ஊழியர்கள் தங்கள் மருத்துவச் செலவில் ஒரு பகுதியை மட்டும் ஏற்குமாறு BSNLEU தலைவர்கள் ஒப்புக் கொண்டது ஏன்?
நன்றி: சென்னை இணைய தளம்.

No comments:

Post a Comment