தமிழ் மாநில செயலர் தோழர் பட்டாபிராமன் மற்றும் தோழர்
தமிழ்மணி ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் சிறப்புக் கூட்டங்களில் பங்கேற்றனர். ஈரோடு புறக்
கிளை, பொதுமேலாளர் அலுவலகக் கிளை, பவானி கிளை ஆகியவற்றில் சிறப்புக் கூட்டங்கள் நடைபெற்றன.
மூன்று கூட்டங்களிலும் திரளாக ஊழியர்கள் பங்கேற்றனர். தோழியர்கள் பங்கேற்பு சிறப்பாக
இருந்தது. ஈரோடு மாவட்டத்தில் NFTE வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.
தோழர்
T.ராஜேந்திரன் தலைமையேற்றார். தோழர்கள் பட்டாபிராமன், தமிழ்மணி, குமார், V.செல்வராஜன்,
K.ராஜமாணிக்கம், யாசின் ஆகியோர் பங்கேற்றனர். தோழர் பட்டாபிராமன் தனது உரையில்
78.2 அகவிலைப்படி இணைப்பு, போனஸ், பதவி உயர்வு, எஸ்.சி, எஸ்.டி ஊழியர்களுக்கான இட ஒதுக்கீடு,
நிறுவனத்தை காத்திட வேண்டிய அவசியம் போன்ற பல்வேறு பிரச்னைகள் பற்றி விரிவாகப் பேசினார்.
அண்ணா தொழிற்சங்க மாவட்டச் செயலர் தோழர் N.சுந்தர் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment