NFTECHQ

Tuesday 2 April 2013

தேர்தல் சிறப்பு கூட்டம்.


ஈரோடு மாவட்டத் தலைவர் தோழர் கே.ராஜமாணிக்கம் தலைமை ஏற்றார். தோழர்கள் மாலி, செல்வராஜன் முன்னிலை வகித்தனர். மாநில துணைச் செயலர் தோழர் யாசின் துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலர் தோழர் குமார் சங்க முழக்கம் தேர்தல் சிறப்பிதழை வெளியிட்டார். அதனை பொது மேலாளர் கிளைச் செயலர் இளைய தோழர் செந்தில் பெற்றுக் கொண்டார். அகில இந்திய துணைப் பொதுச் செயலர் தோழர் மதிவாணன் எதிர்வரும் தேர்தல் குறித்து சிறப்பான உரையாற்றினார். கூட்டத்தில் பங்கேற்று அண்ணா தொழிற்சங்க தலைவர் தோழர் மோகன்ராஜ் வாழ்த்துரை வழங்கினார். மாவட்ட துணைச் செயலர் தோழர் லாசர் நன்றி நவின்றார். கூட்டத்தில் திரளாக தோழர்கள் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment