NFTECHQ

Thursday 24 October 2019


உள்ளது உள்ளபடி
23.10.2019 அன்று BSNL மற்றும் MTNL நிறுவனங்களைப் புத்தாக்கம் செய்வது குறித்து மத்திய அமைச்சரவை சில முடிவுகளை எடுத்துள்ளது.
அதன் விபரங்கள் என்ன?
1. BSNL மற்றும் MTNL நிறுவனங்களுக்கு 4Jஜி சேவைக்கான அலைக்கற்றை ஒதுக்கப்படும். இதற்காக 20140 கோடி ரூபாய் அரசு இரண்டு நிறுவனகளுக்குள்ளும் உட்செலுத்தும்.
இதற்கான ஜிஎஸ்டி தொகையான 3674 கோடி ரூபாயை அரசே ஏற்கும்.
2. மத்திய அரசின் உத்தரவாதத்துடன் கூடிய பத்திரங்க்கள் மூலம்  
15000 கோடி ரூபாய் திரட்டிக் கொள்ளலாம்.. இதன் மூலம் இரண்டு நிறுவனங்களும் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தவும், மூலதனச் செலவுக்கும் (CAPX) அன்றாட நிர்வாக மற்றும் பராமரிப்புச் செலவுகளுக்கும் (OPEX) பயன்படுத்திக் கொள்ளலாம்.
3. 50 வயதுக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான விருப்ப ஓய்வுத்திட்டம் உருவாக்கப்படும். இத்திட்டத்தின் அமசங்களை அந்த நிறுவனங்க்களே இறுதி செய்யும். இந்த விருப்ப ஓய்வுத்திட்டத்துக்காக ரூபாய் 17169 கோடி செலவாகும். இச்செலவை அரசே ஏற்கும். மேலும் ஓய்வூதியப் பலன்களுக்கான செலவை (ஓய்வூதியம், பணிக்கொடை(கிராஜுவிட்டி, மற்றும் ஓய்வூதிய கமுட்டேஷன்)
அரசே ஏற்கும்.
(விடுப்ப்பைக் காசாக்கும் LEAVE ENCASHMENT நிறுவனங்க்கள் ஏற்க வேண்டியதிருக்கும்). நிர்வாகச் செலவுகளைக்க்வே இத்திட்டம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது ஊழியர்களின் சம்பளத்துக்கு ஆகும் செலவைக் குறைத்தல்
4. BSNL மற்றும் MTNL தங்களின் அசையாச் சொத்துக்களைவிற்று பணமாக்கிக் கொள்ளலாம். வளர்ச்சிப்பணிகள், அன்றாட நிர்வாக மற்றும் பராமரிப்புச் செலவுகள், ஓய்வூதிய காலச்செலவுகள் ஆகியவற்றிற்கு இந்தப் பணத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. BSNL மற்றும் MTNL நிறுவனங்க்களை இணைத்து ஒரே நிறுவனமாக அமைப்பது என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவுகள் குறித்து சில சந்தேகங்கள் வஎழுகின்றன.விளக்கங்கள் தேவைப்படுகின்றன. அவற்றை பிறகு பகிர்வோம்.  

No comments:

Post a Comment