NFTECHQ

Monday 26 August 2019


இறுதி வாக்காளர் பட்டியலும்
சில கணக்குகளும்
தமிழகத்தில்  உறுப்பினர் சரிபார்ப்புக்கான தேர்தலின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 2013ஆம் ஆண்டு 780 வாக்காளர்கள் இருந்தனர்.2019ல் 477 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 303 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் 2013ஆம் ஆண்டு 12074 வாக்காளர்கள் இருந்தனர்.2019ல் 7682 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். 4392 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

அகில இந்திய அளவில் 2013ஆம் ஆண்டு 163820 வாக்காளர்கள் இருந்தனர். நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்ட தகவலில் 31.05.2019 அன்று 117305 ஊழியர்கள் பணியில்  இருப்பதாக அறிவிக்கப்பட்ட்டது.
2013 மே முதல் 2019 மே வரை 37 மாதங்களில் 46515 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.
சராசரியாக மாதம் ஒன்றுக்கு 1300பேர் பணிக்காலம் முடிந்து ஓய்வு பெறுகின்றனர்.

இதனையே அளவீடாகக் கொண்டால் BSNL நேரடி நியமன ஊழியர்கள் மற்றும் பரிவு அடிப்படையில் பணி பெற்றவர்களையும் தவிர்த்து கணக்கிட்டால் மீதி உள்ள ஊழியர்கள் அனைவரும் 60  மாதங்களில் பணிநிறைவு பெற்றுவிடுவார்கள்.

No comments:

Post a Comment