செயலுக்கு வித்திட்ட
செம்மையான செயற்குழு
18.08.2019 அன்று கோபியில் மாவட்டச்
செயற்குழு மாவட்டத் தலைவர் தோழர் பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் எழுச்சியோடு
நடைபெற்றது.
கோபி கிளைச்செயலர் தோழர் கார்த்திகேயன்
வரவேற்புரையாற்றினார். மாநில அமைப்புச் செயலர் தோழர் புண்ணியகோட்டி செயற்குழுவைத்
துவக்கிவைத்து உரையாற்றினார்.
செயற்குழுவின் நோக்கம் குறித்து
மாவட்டச்செயலர் தோழர் பழனிவேலு எடுத்துரைத்தார்.
01.08.2019 அன்று கோபியில் நடைபெற்ற
தமிழ்மாநில தேர்தல் பிரச்சாரத் துவக்க விழா மற்றும் 16.09.20119 அன்று நடைபெறவுள்ள
உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் குறித்து கிளைச்செயலர்களும் மாவட்டச் சங்க
நிர்வாகிகளும் தங்கள் கருத்துக்களை நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் முன்வைத்தனர்.
தோழர்கள் மாலி, ராஜமாணிக்கம் ஆகியோர்
வாழ்த்துரை வழங்கினர்.
மத்துய சங்க சிறப்பு அழைப்பாளர் தோழர்
செம்மல் அமுதம் சிறப்புரையாற்றினார்.
தேர்தல் பிரச்சாரத் துவக்கவிழாவைச்
சிறப்பாக நடத்திட ஒத்துழைப்பு நல்கிய மாவட்டச் சங்க நிர்வாகிகள் கிளைச்செயலர்கள்,
முன்னணித்தோழர்கள் தோழியர்கள் அனைவருக்கும் பாராட்டு தெரிவித்து
கெள்ரவிக்கப்படனர்.
விழாவினைச் சிறப்பாக நடத்திட
அரும்பணியாற்றிய கோபி கிளைத் தோழர்கள் தோழியர்கள் அனைவரும் பாராட்டி
கெளரவிக்கப்பட்டனர்.
உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது குறித்து முடிவுகளும் பிரச்சாரப் பயணத் திட்டமும் வகுக்கப்பட்டன.
மாவபட்ட அமைப்புச் செயலர் தோழர்
செளந்தர் நன்றி கூறினார்.
சிறப்பான,
ஆக்கபூர்வமான,
வெற்றிக்கு வித்திட்ட முடிவுகளொடு
செயற்குழு சிறந்தது.
No comments:
Post a Comment