அக்ங்கள் மகிழ்ந்த ஆண்டுப்பேரபவை
825 உறுப்பினர்களைக் கொண்ட ஈரோடு
மத்திய அரசு ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் 28ஆவது ஆண்டுப்பேரவை 17.08.2019 அன்று
அறிவாற்றல் மிக்க தோழர் D.மாணிக்கம் அவர்கள் தலைமையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
பொருள்பொதிந்த செயல் அறிக்கையை
செயலாற்றல் மிக்க தோழர் S.ராஜசேகரன் சமர்ப்பித்தார். வியக்கத்தக்க பல்வேறு
பிரச்னைகள் தீர்வைப் பற்றி எடுத்துரைத்தார். வளமான நிதிநிலை அறிக்கையை பொருளாளர்
அனுபவம் மிக்க தோழர் C.ராமசாமி சமர்ப்பித்தார். செயல்பாட்டின் சிறப்பையும்
அமைப்பின் வளர்ச்சியையும் நிதிநிலை சுட்டிக்காட்டியது. வருமானவரி மற்றும்
அஞ்சல்துறையில் வங்கிச்சேவை குறித்து செயலால் பொழுதளக்கும் தோழர் P.சண்முகம்
விள்க்கவுரையாற்றினார். 90 மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட தோழர் தோழியர்களுக்கு
சிறப்பான வாழ்த்து வழங்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. தோழர் மாலி
"BSNL இன்று" என்னும் தலைப்பில் உரையாற்றினார். தோழர்கள்
V.செல்வராஜன், K.ராஜமாணிக்கம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அனைவருக்கும் நினைவுப்பரிசு அளிக்கப்பட்டது.
250க்கும் மேற்பட்ட தோழியர்கள் உட்பபட 500
பேர் கலந்து கொண்டனர். தலைவர்களின் உரையை அனைவரும் அமைதியுடன் செவிமடுத்தது
சிறப்பு. சுவைமிக்க மதிய உணவு
பாராட்டுக்குரியது.
தோழர்கள் D.மாணிக்கம், S.ராஜசேகரன்,
C.ராமசாமி ஆகியோர் முறையே தலைவ்ர், பொதுச்செயலர், பொருளர் பதவிகளுக்கு மீண்டும்
ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தோழர்கள் D.மாணிக்கம், S.ராஜசேகரன்,
C.ராமசாமி, P.சண்முகம், A.பாலசுப்ரமணியன், K.மாசிலாமணி ஆகியோர் உறுப்பினர்களுக்காக
ஆற்றும் அரும்பெரும் சேவை பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது. அமைப்பில்
சிறப்பாகச் செயல்படும் தோழர்கள் கெளரவிக்கப்பட்டனர். வரும் காலத்தில் மேலும்
சிறப்பான செயல்பாட்டுக்கான சில நடைமுறைகளும் உருவாக்கப்பட்டன. அகங்களை மகிழ்வித்த ஆண்டுப்பேரவை சிறப்பாக
நடைபெற உழைத்திட்ட அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
No comments:
Post a Comment