NFTECHQ

Wednesday 6 June 2018


அஞ்சலி
தோழர் G.டதார் மறைந்தார். டெல்லி மத்திய அரசு தலைமை செயலக ஊழியர் சங்க பொதுச் செயலராக பல் லாண்டுகள் பணியாற்றி பல அரும் பெரும் போராட்டங்களின் மூலம் அவர்களுக்கு பல உரிமைகளைப்பெற்றுத் தந்தவர்.

1968 மத்திய அரசு ஊழியர்களின் போராட்டத்தில் ஒரு பெரும் உந்து சக்தியாக டெல்லியில் செயல்பட்டவர். காவல்துறையினர் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்திய போதும் அஞ்சாமல் எதிர்கொண்டு போராட்டம் நடத்திய பெரும் போராளி.
A| TUC மத்திய தொழிற்சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு அதன் தேசீய செயலர்களில் ஒருவராக கடைசி வரை செயல்பட்டவர்.
NFTE இயக்கத்தின் அகில இந்திய மாநாடுகள் மற்றும் செயற்குழுக் கூட்டங்களில்  பங்கேற்று வழிகாட்டி உரையாற்றிய தோழர்.

அவர் மறைவு இந்திய தொழிலாளி வர்கத்திற்கும்  AITUC அமைப்பிற்கும் பேரிழப்பாகும்.நமது கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறோம்.

No comments:

Post a Comment