NFTECHQ

Sunday 28 December 2014

துவங்கியது கையெழுத்து இயக்கம்





அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் ஈரோடு மாவட்ட கூட்டமைப்பின் சார்பாக கையெழுத்து இயக்கம் கோபியில் 27.12.2014 அன்று துவங்கியது. 27.12.2014க்குள் இப்பணியை துவங்கிட வேண்டும் என மாவட்டக் கூட்டமைப்பு எடுத்த முடிவு கோபியில் அமலாக்கப்பட்டது.
நமது மாவட்டச் செயலர் எடுத்த் முன்முயற்சிகள் காரணமாக இப்பணி சிறப்புடன் துவங்கியது.
கூட்டமைப்பின் தலைவர் தோழர் பழனிவேலலு தலைமை ஏற்றார்
SNEA  கிளைச் செயலர் தோழர் பாலசுப்ரமணியன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் தோழரும் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் சுந்தரம் அவர்கள் முதல் கையெழுத்திட்டு கையெழுத்து இயக்கத்தைத்த் துவக்கி வைத்து உரையாற்றினார். கூட்டமைப்பின் கன்வீனர் தோழர் பரமேஸ்வரன்,
கூட்டமைப்பின் தலைவர் தோழர் பழனிவேல், TEPU சங்க்கத்தின் மாவட்டச் செயலர் தோழர் மோகன், தோழர் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
TEPU சங்க்கத்தின் கிளைச்செயலர் தோழர் செல்வன் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment