தோழர் P.V.சண்முகம் 04.07.2014 அன்று இரவு இயற்கை
எய்தினார் என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறோம்.. PVS என்று அனைவராலும் அன்புடன்
அழைக்கப்பட்ட தோழர். NFPTE, NFTE பேரியக்கங்களில் ஆழமான பற்றும் விசுவாசமும்
அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட தோழனாக வாழ்ந்தார். குன்னூர், கோவை, சேலம், ஈரோடு,
தர்மபுரி மாவட்டங்களை உள்ளடக்கிய த்ந்திப்பிரிவு
கோட்டத்திற்கு கோட்டச் செயலராக சிறப்பாகப் பணியாற்றிய தோழர்.
தந்தி நம்மை விட்டு நிரந்தரமாகப்
பிரிந்திருக்கலாம். ஆனால் தந்திப் பிரிவின் தளபதிகளில் ஒருவராக வாழ்ந்த தோழர் PVS நம் நினைவுகளில் என்றும்
வாழ்வார்.
No comments:
Post a Comment