NFTECHQ

Sunday 1 July 2018


இயக்கத்தை இயக்கும் இதயங்கள்

30.06.2018 அன்று தோழியர் கமலம் ATT அவர்களுக்கு அலுவலகத்தில் நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழாவில் தோழர்கள் மாலி, செல்வராஜன் அவர்களுடன் நானும் பங்கேற்றேன். அனைவரும் பாராட்ப்டுரை நல்கியபின் தோழியர் கமலம் ஆற்றிய ஏற்புரை இது.

"எனது கணவர் நோயுற்றபோதும், சிகிச்சை பலனின்றி அவர் இறந்த பின்பும் தோழர்கள் மாலி, செல்வராஜன், ராஜமாணிக்கம் ஆகியோர் மிகவும் உதவிகரமாக இருந்தனர். எனக்கு ஆறுதல் கூறினர். அவர்கள் முயற்சியால் எனக்கு வேலையும் கிடைத்தது. அன்று முதல் இன்று வரை எனக்கு எல்லாமே தொழிற்சங்கம்தான். தொழிற்சங்கம்தான் எனக்கு எல்லாமுமாக இருந்தது. தொழிற்சங்கம் இல்லாதிருந்தால் எனக்கு இந்த வாழ்வு இல்லை. சந்தா, நன்கொடை ஆகியபற்றை மனநிறைவுடன் கொடுத்துவிடுவேன். எந்த போராட்டமாக இருந்தாலும் பங்கேற்றுள்ளேன். வேலைநிறுத்தம் செய்தால் சம்பளம் கிடைக்காது என்று சிலர் சொன்னார்கள். சமபளத்தைவிட தொழிற்சங்கம் தான் சொல்வதுதான் பெரிது என்பதாலும், இந்த சம்பளம் வாங்குவத்ற்கே தொழிற்சங்கம்தானே காரணம்  என்பதாலும்
வேலைந்றுத்தத்தில் பங்கேற்றேன். எல்லோருக்கும் நன்றி."

தோழியர் கமலம் போன்றவர்களின் இதயங்கள் கொண்டவர்களால்தான் இன்னமும் இந்த இயக்கம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

No comments:

Post a Comment