NFTECHQ

Tuesday 31 October 2017

AITUC 98
ஏஐடியுசி அமைப்பின்
98வது ஆண்டு உதயநாள் இன்று.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக,
இந்தியாவில் தொழிற்சங்க சட்டமே
இல்லாத காலத்தில்,
துணிவுடன் உதித்தது ஏஐடியுசி.

1920 ம் ஆண்டு,
லாலா லஜபதிராய் தலைமையில்
தோன்றிய இச்சங்கத்தின் வயது - 98.

அக்டோபர் - 31ம் தேதியான இன்று, இந்திய தொழிலாளர் வர்க்கம் தலை நிமிர்ந்து.
1920, அக்டோபர் 31ம் தேதி, இயற்றிய முதல் தீர்மானம், சம்பளம், போனஸ், பஞ்சப்படி கேட்டு அல்ல.

இந்திய நாட்டை அடிமைப்படுத்திய வெள்ளை அரசுக்கு எதிராக பிரிட்டிஷ் அரசு, முற்றிலும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்பது தான்.

இன்று 2017   அக் டோபர்  31,
கொள்கை அற்ற கொள்ளை அரசே
வெளியேறு என உழைக்கும் மக்கள்
ஒரணியில், சாதி, மத, அரசியல்
வேறுபாடுகளை களைந்து
திரள சபதமேற்போம்

இந்நாளில் ...

உழைப்பவர் ஒற்றுமை உறுதியாகட்டும்.

AITUC ஜிந்தாபாத்

No comments:

Post a Comment