NFTECHQ

Tuesday 14 March 2017

தலித்களுக்கு மட்டும்

ஏன் மர்ம மரணங்கள்?


ரோஹித் வெமுலா,
சரவணன்,
முத்துகிருஷ்ணன்
மரணங்கள்.

இந்த மரணங்கள் முற்றுப்புள்ளிகள் அல்ல, கமாக்கள். "நீங்கள் படிக்க வந்தால் இப்படித்தான் சாவீங்கடா," என மத்திய கல்வி நிறுவனங்களை ஆதிக்கத்தில் வைத்திருக்கும் உயர்சாதி வெறியர்களின் எச்சரிக்கை.

ஊடகங்களில் மர்ம மரணங்கள் என்ற பெயரில் வெளியாகும் இச்செய்திகளை மர்ம மரணங்களாகவே மறந்துவிடுகிறோமே தவிர, அதெப்படி மர்ம மரணம் அடைகின்றவர்கள் எல்லோருமே தலித்களாக இருக்கிறார்கள்?

மர்ம மரணம் என்பதென்ன எப்போதும் தலித்துகளுக்கும், எப்போதாவது பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் மட்டும் வரும் அரிய வியாதியா?

பெரியாரும் அம்பேத்காரும் அரசியலுக்காக மட்டுமே போற்றப்படுபவர்கள் ஆகிவிடக் கூடாது.


அவர்கள் வழியில் நின்று போராடி இத்தகைய கொடுமைகளைத் தடுக்கவும், வேரறுக்கவும் அவர்கள் வகுத்த பாதை பயன்படுத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment