வீச்சு
"காரைக்குடி இணையதளத்தின்
எதுகை மோனை எழுத்து முறை
பல தோழர்களை
வசீகரித்துள்ளது.
மாரியின் எழுத்துமுறை
வீச்சாக சென்றூள்ளது."
இந்த வரிகள் வேலூர் மாநில மாநாட்டு
செயல்பாட்டு அறிக்கையில் உள்ளது.
வேலூருக்கு முன்பு
வசீகரிக்கப்பட்ட எதுகை மோனையுடன்
வீச்சாக இருந்த எழுத்துக்கள்
அமைப்பு நிலைக்கு
உட்பட்டவையாகத் தெரிந்து
பாராட்டப்பட்டதா?
வேலூருக்குப் பின்பு
வசீகரிக்கப்பட்ட எதுகை மோனையுடன் வீச்சாக இருக்கும் எழுத்துக்கள்
அமைப்பு நிலைக்கு மாறுபட்டவையாகத்
தெரிகிறதா?
மாறியது அமைப்பு விதிகளா?
மனித மனங்களா?
வீச்சு சாதகமாக இருந்தால் வசீகரிக்கும்.
வீச்சு பாதகமாக இருந்தால் கரிக்குமோ?
நிலை மாறும் உலகில் எல்லாமே
நிரந்தரம் என்ற கனவில்
வாழக் கூடாது.
No comments:
Post a Comment