NFTECHQ

Tuesday 8 December 2015

இயற்கை தந்த
இனிய வரம்
            ஆனால்.......

இயற்கை மக்களுக்கு மழையை வரமாகத் தந்தது.
ஆனால் அதை மகிழ்வுடன் ஏற்க இயலாத சூழ்நிலை உருவாக்கப்பட்டது.

மக்களின் இன்னல்களைத் தடுக்க பல்வேறு  நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்ற குரல்கள் ஒலிக்கின்றன.

குறுகிய காலத்தில்,வரலாறு கானாத மழை. ஆகவே என்ன செய்ய முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

ஆனாலும் மக்கள் படும் துயரங்களைப் பார்க்கும் போதும், கேட்கும்போதும் கண்களில் நீர்மழை.

அனைத்தையும் இழந்த மக்கள் இனி வாழ்க்கையை புதிதாகத் துவங்க வேண்டிய பரிதாபகரமான நிலையில் உள்ளனர்.

பல ஆண்டுகளாக உழைத்துச் சேர்த்த அனைத்தையும் ஒரு சில மணித்துளிகளில் இழந்து வாடும் மக்களின் சோகம் ந்ம் மனதை கலங்கடிக்கிறது.


பாதிப்பில்லாத பகுதிகளில் வாழும் நமது தோழர்கள் தங்கள் மனதை விசாலமாக்கி ஏதேனும் ஒரு வகையில் அந்த மக்களின் துயர் துடைக்க உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment