தொடரும் பயணம்
மாவட்டச் செயலர் தோழர் பழனிவேலு 16.12.2015 அன்று ஈரோடு எக்ஸ்டர்னல்
பகுதியில் நமது உறுப்பினர்களைச் சந்தித்தார். தோழர்கள் புண்ணியகோட்டி, ஆனந்தன், கதிர்வேலு
ஆகியோர் உடன் சென்றனர்.
17.12.2015 அன்று தோழர்கள் V.செல்வராஜன், அன்சர், பாலகிருஷ்ணன் ஆகியோருடன் தாராபுரம் பகுதியில் உள்ள நமது தோழர்களைச் சந்தித்தார்.
18.12.2015 அன்று மாவட்டச் செயலர் பழனிவேலு மாவட்டப் பொருளர் தோழர் ராஜேந்திரன், மாவட்ட உதவிச் செயலர் தோழர் புண்ணியகோட்டி, ஆகியோருடன் காங்கயம், வெள்ளகோவில், கொடுமுடி பகுதியில் உள்ள நமது ஊழியர்களைச் சந்திக்கும் இயக்கத்தை மேற்கொண்டார்.
19.12.2015 அன்று தோழர் புண்ணியகோட்டி அவர்களுடன் ஈரோடு ரூரல் பகுதியில் உள்ள நமது உறுப்பினர்களைச் சந்தித்தார்.
இந்த சந்திப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
உறுப்பினர்களைச் சந்திப்பது, நலம் விசாரிப்பது, அவர்கள் குறை
கேட்பது என்ற நோக்கத்தோடு மட்டுமே இந்த சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.
இந்த சுற்றுப்பயணத்தில் தோழர் நாகராஜன் அவர்களின் உதவியும் உறுதுணையும் நன்றிகுகும் பாராட்டுக்கும் உரியது
இப்படிப்பட்ட சந்திப்பு உறுப்பினர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உருவாக்கியது.
ஒரு சில சிறிய பிரச்னைகள் மட்டுமே தெரிவிக்கப்பட்டன.
அவை அனைத்தும் விரைவில் தீர்வு காணப்படும்.
No comments:
Post a Comment