BSNL நிறுவனத்தைப் புத்தாக்கம் செய்ய
பைப்லைன்கள் போடப்பட்டு வருவதாக மாறி மாறி
சொல்லப்படுகிறது.
டிலாய்ட் கமிட்டி தூக்கி நிறுத்தி விடும் என்று கனவு
காண்கிறார்கள்.
ஆனால்...
அனேகம்மக எல்லா ஊர்களிலும் உள்ள முக்கியமான பகுதிகளில்
பேட்டரி, பவர் பிளாண்ட், என்ஜின் ஆகியவை
மிக மோசமான நிலையில் உள்ளன.
வெண்டிலேட்டர் மூலம் சுவாசம் விடும் நோயாளியின் நிலையைப்
போல் அந்த முக்கியமான உபகரணங்கள் உள்ளன.
இந்த உபகரணங்களை மாற்றாமல் நல்ல சேவை என்பது சாத்தியமற்றது.
அதிகாரிகளையும், ஊழியர்களையும் குறை சொல்ல முடியாது.
ஏனெனில் காலாவதியாகி, காய்லான் கடைக்குப் போகவேண்டிய
கருவிகளை வைத்துக் கொண்டு அவர்கள் என்ன செய்ய முடியும்?
போர்க்கால அடிப்படையில் இவை மாற்றப்படா விட்ட்டால் சேவை
சீரழியும்.
இதைச் சரிசெய்வதே புத்தாக்கத்துக்கு அடிப்படை.
செய்வார்களா?
No comments:
Post a Comment