நிர்வாகத்தின்
தவறுகளைச்
சுட்டிக்காட்டி
பல்வேறு மாவட்டச் சங்க இணையதளங்களில் செய்திகள் வெளியிடப்படுகின்றன.
நாம் இதுவரை எதுவும்
எழுதியதில்லை.
நமது ஈரோடு
மாவட்டத்தில் நடப்பது எல்லாம் நன்றாகவே நடக்கிறது என பெருமையுடன் நிணைத்திருந்தோம். அவ்வாறே நம்பினோம்.
ஆனால் காதில்
விழும் சில செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
நமது ஈரோடு
மாவட்டத்திலா
இப்படி என் அதிர்ச்சியாக இருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள
அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பெருமை மிக்க பணிக்கலாச்சாரம் பற்றி பெருமையுடன்
பேசியிருக்கிறோம்.
ஆனால் மனதிற்குச் சங்கடம்
தரும் பல செய்திகள் வருகின்றன. அவை உண்மையாக இருக்கக் கூடாது என ஆசைதான். ஆனால்
அவை உண்மை என்பது யதார்த்தமாக இருக்கிறது. மேற்கொண்டு எதைப் பற்றியும் நாம்
விசாரிக்க விரும்பவில்லை. அவற்றை மறப்போம். மீண்டும் இப்படிப்பட்ட செய்திகள்
காதுக்கு வராது என்னும் நம்பிக்கையோடு.
No comments:
Post a Comment