மாகாத்மா அவர்களே
நீங்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை அனுபவித்து வருகிறோம். உங்களின்
சுதேசிக் கொள்கையும் உங்களின் காங்கிரஸ் அரசாங்கத்தால் கைகழுவப்பட்டது.
இரு தினங்களுக்கு முன்னால் தினத்தந்தி தொலைக்காட்சியில் ஒரு
செய்தி வாசிக்கப்பட்டது.
“தற்போது புதிதாக அச்சடிக்கப்படும் 10 ரூபாய்
நோட்டுகளில் காந்தி படம் அச்சடிக்கப்படவில்லை. அதற்கு மாறாக அசோகச் சக்கரம்
அச்சடிக்கப்பட்டுள்ளது.” என்று படித்து விட்டு உங்கள் படம்
இல்லாத புதிய 10 ரூபாய் நோட்டையும் காட்டினார்கள்.
கண்களில் கண்ணீர் வந்தது.
இதைப் பார்த்ததற்காக என்னை மன்னியுங்கள் மகாத்மா.
நாடு போகும் போக்கு நன்றாக இல்லை.
இந்திய நாட்டின் கதவுகள் அந்நிய நாட்டுக் கம்பெனிகளின்
வரவுக்காக தகர்க்கப்பட்டு விட்டன.
நாங்களும் உனது வழியில் போராடுகிறோம்.
நீ மீண்டும் பிறப்பாயா?
No comments:
Post a Comment