கனிவான கவனத்திற்கு
16.09.2019 வாக்களிக்கச் செல்லும்போது
அலுவலக அடையாள அட்டையை மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும். அடையாள அட்டையைக்
காண்பிக்காவிடால் வாக்களிக்க இயலாமல் போய்விடும்.
அடையாள அட்டை இல்லாதவர்கள் உரிய
படிவத்தில் அவர்களுக்கான துணைக்கோட்ட அதிகாரியிடம் கையெழுத்து பெற்று அதை எடுத்துச்
சென்று வாக்களிக்கலாம்.
வாக்குப்பதிவு மையத்தின் அதிகாரி தங்களுக்கான
வாக்குச்சீட்டீல்
கையெழுத்திட்டுள்ளாரா என்பதைக்
கவனமாகப் பார்த்திக் கொள்ள வேண்டும்.
வாக்களிக்கும் முன்பு வாக்குச் சீட்டில்
நமது இணைந்த கரங்கள் சின்னம் சரியாகவும் தெளிவாகவும் அச்சிடப்பட்டுள்ளதா, வாக்குச்சீட்டு
கிழிந்து சேதம் ஏற்பட்டுள்ளதாஎன்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும் .
சரியாக, முறையாக
இல்லையெனில் வேறு வாக்குச் சீட்டை கோரிப்
பெறலாம்.
வரிசை எண் 15ல் வாக்களிப்போம்.
விடியலுக்கான விதையிடுவோம்
No comments:
Post a Comment