நிர்வாகத்தின் கருத்து
கேட்பு
தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல சம்பந்தமாக நிர்வாகம் NFTE,
BSNLEU,AIBSNLEA,SNEA ஆகிய சங்கங்களிடம் கருத்து கேட்டுள்ளது. 30.03.2018க்குள்
கருத்து தெரிவிக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. கருத்து கேட்கப்பட்டு கடிதம் அனுப்பிய
நாள் 15.03.2018
நிர்வாகத்தின் கருத்துக்கள்
1 இரகசிய வாக்கெடுப்பு மூலம் உறுப்பினர்
சரிபார்ப்புத் தேர்தல் நடத்துவது தற்போதுள்ள BSNL நிறுவனத்தின் நிதிச்சுமை காரணத்தால்
உகந்தது இல்லை.
2.நாடு முழுவதும் ஒரே நாளில் உறுப்பினர்
சரிபார்ப்புத் தேர்தல் நடத்தப்படுவதால் செலவு அதிகமாகிறது. தேர்தல் அதிகாரி,
வாக்குச்சாவடி அதிகாரி என ஏராளமான அதிகரிகளைப்
பணியில் அமர்த்த வேண்டியுள்ளது. CHECK OF SYSTEM (ஊழியர்களிடம் நான் இந்தச் சங்கத்தின்
உறுப்பினர் என படிவம் பெறுதல்) மூலம் உறுப்பினர்
சரிபார்ப்புத் தேர்தலை நடத்தினால் செலவில்லை.
3.இரகசிய வாக்கெடுப்பில் தேர்தல்
நடத்தினால் அந்த சமயத்தில் எந்த சங்கத்துக்கு வாக்களிக்கிறார்களோ அந்த
அடிப்படையில்தான் உறுப்பினர் எண்ணிக்கை தெரிய்வரும். படிவம் கொடுக்கும் முறையில் ஊழியர்கள்
நீண்ட காலமாக எந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்தார்கள் என்பது தெரியவரும். இரகசிய
வாக்கெடுப்பு முறையில் ஒரு சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கையைச் சரியாகக் கணிக்க முடியாது.
4.அரசுத் துறைகளில் படிவம் கொடுக்கும்
முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது.
நிர்வாகம் இந்த கருத்துக்களைச் சொல்லி
சங்கங்களிடம் கருத்து கேட்டுள்ளது.
இது குறித்த நமது கருத்துக்கள் தொடரும்.
No comments:
Post a Comment