NFTECHQ

Wednesday 15 July 2015

மரணத்தைத் தழுவிய மாமன்னன்

வந்தவரெல்லாம் தங்கி விட்டால்

இந்த மண்ணில் நமக்கு இடமேது

வாழ்க்கை என்பது வியாபாரம் அதில்

ஜனன  என்பது வரவாகும்

மரணம் என்பது செலவாகும்

 

இந்த வரிகளுக்கு இசை வடிவம் தந்த மெல்லிசை மன்னன் எம்.எஸ்.விஸ்வனாதன் இசைப்பதை நிறுத்திக் கொண்டார்.

 தமிழத்தாய் வாழ்த்துக்கு இசை வடிவம் தந்தவர்.

 அகம்பாவமும் அக்ங்காரமும் ஆணவமும் இல்லாத அரும் பெரும் ஆற்றல் கொண்ட இசை வேந்தன்.

 300 இசைக்கருவிகளை வைத்தும் இசை அமைக்கல்லாம். மூன்று இசைகருவிகளை வைத்தும் தேனிசையைத் தரலாம் என்ற இலக்கணம் படைத்தவர்.

 கண்ணதாசனும் இவரும் இணைந்து சாகா வரம் பெற்ற பாடல்களைத் தந்தனர். இந்த ஒற்றுமைக்குக்

காரணம் அவர்கள் இருவருக்கும் பிறந்த தேதியும் மாதமும் ஒன்றாக அமைந்தது ஒரு காரணமோ?

 வறுமையால் குடும்பமே தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்த போது, முய்ன்று இசையை மூச்சாக்கி பலரின் வயிற்றுக்குச் சோறிட்ட இசையின் அக்சய பாத்திரம் எம்.எஸ்.வி.

 பலருக்கு பல பட்டங்களும் விருதுகளும்

அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே வழங்க்கப்பட்டுள்ளன.

ஆனால் எம்.எஸ்.வி.

வாழ்ந்த காலத்தில் அவர் எவ்விதத்திலும் அங்கீகரிக்கப்படவில்லை என்பது வேதனை தருகிறது.

 பல சதனைகளையும் தியாகங்க்கலையும் செய்து சமூக நலன், மக்கள் நலன்,தொழிலாளர் நலன் காத்தவர்களுக்கும் இந்நிலைதான்.

இறந்த பிறகு ஈடு செய்ய முடியாத இழப்பு என்பார்கள்.

அதற்கு எம்.எஸ்.வி அவர்களும் விதிவிலக்கல்ல.

ஆனால் மக்களால் அவர் அங்கீகரிக்கப்ட்டார் என்பது என்றும் சாலகாத உண்மை.

 தமிழ், இசை உள்ள வரை அவர் புகழ் வாழும்.

 தமிழும் மறையாது. இசையும் மறையாது.

 “நிரந்தரமானவன் அழிவதில்லை.

எந்நிலையிலும் எனக்கு மரணமில்லை

எம்.எஸ்.வி க்கும் மரணமில்லை.

No comments:

Post a Comment