பொள்ளாச்சி
அருகே முத்துமலைப்பதி பழங்குடி மக்கள் வீடுகளுக்கு 20 வருடங்களுக்கும் மேலாக மின்
இணைப்பு கிடைக்காத நிலை நீடிக்கிறது. வீதி வழியே மின் இணைப்பு சென்றாலும்,
வீடுகளுக்கு நீட்டிக்கப்படாததால், இங்குள்ள மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி
வருகின்றனர்.
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு
உட்பட்டது சொக்கனூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் முத்துக்கவுண்டனூர் பகுதியில்
பிரசித்தி பெற்ற முத்துமலை திருமுருகன் கோயில் உள்ளது. இக்கோயில் அமைந்துள்ள
முத்துமலை அடிவாரத்தில் முத்துமலைப்பதி என்ற பழங்குடி மக்கள் கிராமம் உள்ளது.
இங்கு காலம் காலமாக வசிக்கும் பழங்குடி மக்கள், வன இடுபொருட்களை சேகரித்து
விற்பது, விவசாயக் கூலித் தொழிலை மேற்கொள்வது என அன்றாட பிழைப்பை நடத்தி
வருகின்றனர்.
முத்துமலைப்பதியில் உள்ள 2 தெருக்களுக்கும்
சேர்த்து 3 தெருவிளக்குகள் உள்ளன. பழங்குடி மக்கள் கூறும்போது, ‘வீதிக்கு மட்டுமே
மின் விளக்குகள் அமைத்துக் கொடுத்துள்ளனர். வீடுகளில் மின்வசதி இல்லாததால் அரசின்
விலையில்லா பொருட்கள் அனைத்துமே பயன்படாமல் கிடக்கின்றன. குழந்தைகள் இரவு
நேரத்தில் படிக்க முடியாது. எத்தனையோ முன்னேற்றம் வந்துவிட்டாலும், அதையெல்லாம்
பயன்படுத்த மின்சாரம் வேண்டுமே. ரேடியோ தான் எங்களுக்குள்ள ஒரே ஒரு பொழுதுபோக்கு’
என்கின்றனர்.
சேதமான வீடுகள்
தொகுப்பு வீடுகள் பெரும்பாலும் சேதமடைந்தே
காணப்படுகின்றன. வீடுகளில் ஏற்பட்டுள்ள சேதங்கள், வனத்தினுள் வசிக்கும்
இவர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
“மக்களே திருமுருகனை
வேண்டுங்கள். அவர் ஏதேனும் ஒரு வகையில் இடைத்தேர்தல் ஒன்றை
வரவைபார். அப்புறம் மின்சாரம் என்ன எல்லாமே
கிடைக்கும்”
No comments:
Post a Comment