NFTECHQ

Thursday 11 September 2014

மரணத்திலும் கம்பீரம்

"பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு" என்று முழங்கி முப்பொழுதும் தாய் நாட்டின் மீதும், "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்று தனது தாய்மொழியான தமிழின் மீதும் தீராத பற்றுக்கொண்டிருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவு தினம் இன்று. 
 தேசப்பற்றை பரப்பிய பாரதி "காலா உன்னை சிறு புல்லென மதிக்கிறேன் , எந்தன் காலருகே வாடா ,சற்றே உனை மிதிக்கிறேன்" என மரணத்தையும் கம்பீரமாக எதிர்கொண்டு கவிதை பாடிய மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 93ஆவது நினைவு தினம் இன்று.

சுப்பையா என்கிற பாரதி. இயல்பிலேயே கவி பாடும் ஆற்றல் இருந்ததால் தனது 5ஆவது வயதில் பாரதி என்ற பட்டத்தைப் பெற்றார்.


சுதந்திரப் போராட்ட வீரர், பத்திரிகையாளர், சமூகத்தின் மீது அளவிலா அக்கறை காட்டிய மனிதர், சாதிப் பிளவுகளை வெறுத்தவர், பெண்ணியத்திற்கு குரல் கொடுத்த நடுநிலையாளர் என இன்னும் பல்வேறு அடையாளங்களுடன் உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆராதிக்கப்படும் மகாகவி பாரதி மறைந்தாலும்
வெறுத்தவர், பெண்ணியத்திற்கு குரல் கொடுத்த நடுநிலையாளர் என இன்னும் பல்வேறு அடையாளங்களுடன் உலகெங்கும் உள்ள தமிழர்களால் ஆராதிக்கப்படும் மகாகவி பாரதி மறைந்தாலும், அவரது எழுத்தின் வீச்சு என்றும்

கம்பீரத்துடன் வாழும்.ன்

No comments:

Post a Comment