தலைமைப்
பொதுமேலாளர் மாநாட்டில் நமது அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாத் அவர்கள் ஆற்றிய உரையின் சில பகுதி
“நான் ஒரு வெளிப்படையாகப்
பேசும் அமைச்சர். BSNL நிறுவனத்துக்குப் புத்துயிரூட்டி அதை இலாபம் ஈட்டும்
நிறுவனமாக மாற்ற வேண்டும் என்பதே எனது செயல்பாட்டில் முன்னுரிமையாகக்
கொண்டிருக்கிறேன்.
அனைத்து
உதவிகளியும் செய்ய நான் தயாராக உள்ளேன்.
2008ம்
ஆண்டிலிருந்து BSNL நிறுவனம் சரிவைச் சந்தித்து
வருகிறது. இது ஒரு மோசமான, துரதிர்ஷ்டமான காலமாக இருந்து விட்டுப் போகட்டும். இனி
என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும்.
வாடிக்கையாளர்களின்
எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வருவாயைக் கூட்ட வேண்டும். வாடிக்கையாளர்களுக்குத்
திருப்தியான சேவையை உறுதி செய்ய வேண்டும். அவர்களின் குறைகளை உடனடியாகக் களைய
வேண்டும்.
BSNL நிறுவனத்தின் செயல்பாட்டை
நான் தினமும் கண்காணித்து வருகிறேன்.
நாடு
முழுதும் பரந்துபட்ட நெட் ஒர்க், நல்ல அனுபவம் மிக்க திறமையான அதிகாரிகள்
ஊழியர்கள் என பல்வேறு சிறப்புகளைக் கொண்ட
நிறுவனம் BSNL.
ஆரோக்கியமான போட்டிக்கு அரசுத் துறை நிறுவன்ம் தேவை என்பது
எனது உறுதியான நிலைப்பாடு. அரசுத் துறை நிறுவனம் இல்லாவிட்டால் போட்டி திசை மாறி
மக்கள் துன்பத்துக்கு ஆளாவார்கள்.
அரசுத்
துறை நிறுவனமான BSNL சிறப்பாகச் செயல்பட வேண்டும்
இதுவே
மிகப்பெரிய பொதுந்ல இலட்சியமாகும். இதையே உங்களிடம் எதிர்பார்க்கிறேன.
இதுவே
மக்களின் நலன். தேசத்தின் நலன். வாடிக்கையாளர் நலன்.”
அமைச்சர்
எந்த கட்சியைச் சேர்ந்தவர். அந்தக் கட்சியின் கொள்கைகள் என்ன என்பதைப் பற்றி
ஆராய்வதை விட அவரது பேச்சு செயல்பாடு அவர் சொல்லும் அவரது நோக்கம் இதைக் கண்க்கில்
கொண்டு சிந்திப்போம்.
ந்மது
துறையில் அங்கீகாரத்துடன் செயல்படும் தொழிற்சங்கங்க்கள் இரண்டுமே இடதுசாரி சிந்தனை
கொண்டவை.
தேசப்பற்று
தேசநலன் மக்கள் ந்லன் இவற்றில் இடதுசாரிகளுக்கு உள்ள அக்கறையை பற்றி யாரும் குறை
சொல்ல முடியாது. நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தியாக உணர்வோடு செயல்படுவதில்
இடதுசாரிகளைக் குறை சொல்லும் தகுதியும் எவருக்கும் கிடையாது..
இதை
உணர்ந்து
காலச்
சக்கரம் சுழலும் வேகத்துக்கிணையாகச் சிந்தித்து செயல்பட்டால் BSNL நிறுவனத்தைச்
சரிவிலிருந்து மீட்டு சாதனை நிறுவனமாக மாற்ற முடியும்.
ஒருவர்
காலை மற்றவர் வாருவது என்பதை சிந்தனையிலிருந்து அகற்றி, நானே பெரியவன் என்ற சிந்தனையையும்
ஒழித்து செயல்பட்டால் வருங்க்காலச் சந்ததி போற்றும்..
சிந்தனை
மாறுமா?
செயல்வடிவம்
பெறுமா?
மாறினால்
ந்ல்லது. இல்லையேல் வரலாறு மன்னிக்காது.
இந்தக்
கருது குறித்து
விமர்சனங்களை உளமார வரபவேற்கிறோம்.
No comments:
Post a Comment